உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




264

|--

பாலி:மாட்டேன், மாட்டேன்.

(பாட்டு)

காதலர் பிணைப்பில் ஒருமுடிப்பே

காசினி பெயர்த்திடா ஒருபிடிப்பே!

பெற்றோர் எதிர்த்து வந்தாலும்

பிணைப்பில் முடிப்புத் தளராதே

ஆரா அரரா அரராரா

லாரா லாரரா லலராரா!

அப்பாத்துரையம் - 23

(காத)

(காத)

(காத)

(மாக் ஹீத்தைப் பாலி பற்ற, திரு.பீச்சம் அவரை இழுக்க, சிறிது நேரப் போராட்டத்துக்குப்பின் பாலியை உடன்கொண்டு திரு. பீச்சம் செல்கிறார்)

மாக்: (நெடுமூச்சு விட்டு) லூஸி, என் கண்மணி! பெண்ணென்றால் பேயும் இரங்குமல்லவா? அவள் தகுதிக்கேற்ப அவளைக் கண்முன்னே நடத்த எனக்கு மன உறுதி போதவில்லை. அதற்கு நான் வருந்துகிறேன்.

லூஸி: அன்பரே, நான் உம் மனநிலை சிறிதும் புரியாமல் திண்டாடிப் போனேன்.

மாக்: அதனால்தான்

நீ உணர்ச்சி வேகத்தில் சிந்தனையற்றாய். நான் அவளை மணந்திருந்தால் அவள் தந்தையே என்னைத் தூக்கு மரத்துக்குக் கொண்டுவந்திருப்பாரா?

லூஸி:(ஐயந்தீர்ந்து கலக்கம் தெளிந்து) ஆ, இப்போது நான் மகிழ்ச்சியடைந்தேன். எனக்கு வேண்டுவது திருமணத்தின் கடமையல்ல. என் அன்பனின் உள்ளம் மட்டுமே. நீங்கள் தூக்குமரத்தில் தொங்குவதைக்கூட என்னால் பார்த்திருக்க முடியும். இன் னாருத்தி அணைப்பில் உம்மைக் காணப் பொறுக்கமாட்டேன்.

மாக்: அப்படியானால் இரண்டு வகையிலும் நீ திருப்தியடையப் போகிறாய்.

லூஸி: இல்லை. ஒருநாளும் இல்லை. இனி உம்மைத் தூக்கு மேடையிலிருந்து தடுக்காமலிருக்கமாட்டேன். உம் உயிரை நான்