உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 4

[213

காதலர்: அது காதல் அருமை அறியாமல் செய்தது. இவ்வளவு உண்மையான பற்று ஏற்படுமுன் அறியாமல் மேற்கொண்ட நோன்பு அது.

காதலியர்: அது சரிதான் நேற்றைய உண்மை இன்றைய பற்றில் போம். இன்றைய உண்மை நாளைய பற்றில் போம். போங்களையா, உங்கள் உண்மையும் வேண்டா, பற்றும் வேண்டா.

காதலர்: இல்லை, அப்படி எண்ணவேண்டா; தங்களைக் காதலித்த பின்னர் இனி வேறு யாரையும் ஏறெடுத்துப் பாரோம். காதலியர்: அதுவும் முழுப்பொய்; நேற்று முன் நாள் எங்களுக்குக் காதற்கடிதம் வரைந்த நீவிர் நேற்று வேறு யாருக்கோ காதலுறுதியும் கணையாழியும் தந்துவிட்டு, இன்று மீட்டும் எம்மிடம் ஒன்றும் அறியாதவர் போல் வந்து பிதற்றும் நாடகத்தை யாரிடமையா காட்டுகிறீர்?

காதலர்: நீவிர் கூறுவது விளங்கவில்லையே!

காதலியர்: விளங்கவில்லையா? இதோ பாருங்கள். என்று அவர்கள் தலைமாறிக் கொடுத்த கணையா காட்டினர்.

கணையாழியைக்

அப்போதுதான் காதலர் தாம் ஏமாற்றப்பட்டதைக் கண்டனர். நன்கொடை மாற்றி வைக்கப்பட்டிருந்த சூதை அறிந்து வெட்கினர். ஆயினும் வெளிப்பட, "நாங்கள் வெளித்தோற்றத்தால் தவறினும் அதற்கு நாங்கள் பொறுப்பாளிகள் அல்லர்; உருமாறி வந்த பெண்டிரே பொறுப்பாளிகள். நாங்கள் உண்மை தவறிய குற்றம் ஏற்பட இதனால் இடமில்லை” என்று வாதாடினர்.

காதலியர் அதனை ஏற்காமல் மேலும் ஊடிநிற்கும் நேரம் ஹாலோஃபர்னஸ் ஜாக்குவனெட்டா முதலியோர் வந்து அரசனது ஏற்பாட்டின்படி இளவரசி முதலியோரின் பொழுது போக்கிற்காக “ஒன்பது பெருங்குரவர்” என்னும் நாடகத்தைத் தாம் நடத்தப் போவதாகக் கூறினர்.

காதலர் காதலியர் அனைவரும் தம் பூசலை விடுத்து நாடகங் காணச் சென்றனர்.