உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4

சேக்சுபியர் கதைகள் - 4

யாரும்

முன்வராமையால்

தடைப்பட்டிருந்தது.

(301

பயாங்காவின் மணமும்

இந்நிலையில் பெட்ரூக்கியோ என்ற இளைஞன் காதரீனைத் திருத்தி மனைவியாக்க எண்ணி வந்தான். காதரீனின் வன்சொல்லையும் வெறுப்பையும் பாராட்டாது, அவன் அவளைப் பலர்முன் புகழ்ந்தும், தானில்லாத நேரம் அவள் தன்னை மறைவிற் காதலித்து வெளித்தோற்றத்தில் வெறுப்பாக நடிப்பதாகவும் கூறி எளிதில் அவள் மணவினைக்கு யாவரும் இணங்கும்படி செய்தான்.

ஆனால், மணவினையிலிருந்து தொடங்கி அவன் எல்லோரிடமும் அடாவடியாகவும் பித்துப் பிடித்தவன் போலவும் நடந்துகொண்டான். பணியாட்களையும் பிறரையும் உறுக்கி வாட்டிக் காதரீனுக்குக் கொண்டு வந்த ஊண், உடை, படுக்கை முதலியவைகளைக் குறை கூறி வீசியெறிந்து அன்புமிக்கவனாக நடித்துக்கொண்டே காதரீனுக்கு நல்லுணவின்றியும், நல் ஆடையின்றியும் நல் உறக்கமின்றியும் செய்து அவள் அடமுற்றும் அடக்கி அவளைப் பணிய வைத்தான். பின் தான் கூறியதை எல்லாம் மறுசொல் இன்றி ஏற்றுக் கூறியபடியே நடக்காவிட்டால் அவள் விருப்பமெதுவும் நிறைவேறாதென்பதை வலியுறுத்தினான். அவள் இப் படிப்பினைகளை ஏற்றுத் தங்கக் கம்பியாகி விட்டபின்னர் அவளைத் தந்தை வீட்டுக்கு இட்டுச் சென்றான்.

அவர்கள் மருவீட்டு விழாவை ஒட்டி, பயாங்காவின் மணமும் அவள் தோழியின் மணமும் நடைபெற்றன. காதரீனின் புதிய மாறுபாட்டை உணராமல் மணமக்கள் இருவரும் பப்டிஸ்டாவுடன் சேர்ந்து காதரீனைப் புறக்கணித்துப் பேசியது கண்ட பெட்ரூக்கியோ அவர்களுடன் தத்தம் மனைவியர் குறிப்பறியும் குணத்தைத் தேர்வுக்கு விடுவதெனச் சூளுரைத்தான். பின் ஒவ்வொருவரும் தத்தம் மனைவியரை அழைக்க, மற்ற இருவர் மனைவியரும் சாக்குப்போக்குச் சொல்லி நிற்கக் காதரீன் மட்டும் யாவரும் வியக்கும் வண்ணம் முன் வந்தாள். அவள் உயர்வு கண்டு வெட்கமுற்ற மற்ற இரு பெண்டிரும் தாமும் அவளைப் பின்பற்றித் திருந்தினர்.