60
அப்பாத்துரையம் - 42
முடைய நண்பர் பையில் கையைவிட்டு ஒரு துட்டு எடுக்கப் போனார்.ஆனால், பையில் இதற்காகவே உதிரியாகப்போட்டிருந்த பணங்களெல்லாம் செலவாயிருந்தன. அதிலிருந்த பணப் பையை எடுக்க அவர் முயன்றார். ஆனால் அதுவும் காணப்பட வில்லை. நாடோடிகள் பரிசுகளைப் பெற்றதுடன் நிற்காமல் சட்டைப் பையைக் கத்தரித்துப் பணப்பை, கைக்கடிகாரம் முதலிய யாவும் எடுத்துக்கொண்டனர் என்பது இப்போதுதான் தெரியவந்தது. நண்பர் முகம் சுண்டிற்று. அந்தோ, அவர் ஊர் காவலர். ஆனால் அவரே ஏமாந்தார். ஆயினும் என்முன் இதைக் காட்டிக்கொள்ளாமல், "ஓகோ, இன்று சட்டையை மாற்றிப் போட்டுவிட்டு வந்துவிட்டேன் போலிருக்கிறது,” என்று கூறி, "இரவலனே, உனக்கு இன்னொரு தடவை வேண்டியமட்டும் தருகிறேன்,” என்ற மொழிகளுடன் விரைந்தார்.
இந்நிகழ்ச்சியின் பின் இந்நாடோடிகளைப் பற்றி நான் மேலும் அக்கறைகொண்டு விரிவாக உசாவியும் ஆராய்ந்தும் பல செய்திகளை அறிந்தேன். வரலாற்றுத் தொடக்கத்திலிருந்து இவர்கள் எல்லா நாடுகளிலும் அவ்வக்காலங்களிலும் திரிந்துவந்திருக்கிறார்கள். பல மொழிகளும் அவர்கள் பேசுகிறார்கள். அவர்கள் மொழியும் பல மொழிக் கலவைதான். அவர்கள் எந்த நாட்டுக்குச் சென்றாலும் அந்த அரசுகளுக்குள் ஒரு தனியரசாகவும் குடியரசுகளுள்ளும் ஒரு தனி உட்குடியரசாக வுமே இயங்குகிறார்கள். மனித உலகின் சட்டதிட்டங்கள், பழக்க வழக்கங்கள் அவர்களைக் கட்டுப்படுத்துவதில்லை. எந்த அரசும் அவர்களை வெல்லவும் முடியாது. காரணம் அரசுகளைவிட அவை மனித இயல்பின் குறைகளறிந்து அவற்றின் அடித் தளத்தின்மீது அமைக்கப்பட்டிருக்கின்றன. அவர்கள் நாடோடித் தனம் நிலையான குடிவாழ்வுடைய எந்த நாகரிகத்தாலும் அவர்கள் தாக்கப்படாமலிருக்க உதவுகிறது. அதேசமயம் மக்கள் நம்பிக்கை, உணர்ச்சி, விழிப்பின்மை, அச்சம், சிறுவர் சிறுமியர் அனுபவமின்மை ஆகிய எல்லாவற்றையும் அவர்கள் தங்கள் கைம்முதலாக வைத்து ஆடி வெற்றி பெறுகின்றனர்.
ஹாலந்துப் பத்திரிகை ஒன்றில் அண்மையில் வெளி வந்த ஒரு நிகழ்ச்சி வரலாற்றுடன் இக்கட்டுரையை முடிக்க விரும்புகிறேன். லெய்டனில் இருந்து ஆம்ஸ்டர்டாமுக்குச்