170 || |
அப்பாத்துரையம் - 6 ——————————————— |
16-ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியரும் டச்சுக்காரரும்,17- ஆம் நூற்றாண்டில் பிரஞ்சுக்காரரும் ஆங்கிலேயரும் தென்னகக் கடற்கரைப் பட்டினங்கள் பலவற்றில் வாணிகத் தளங்கள் ஏற்படுத்தினர். படிப்படியாக வாணிக ஆட்சி நாட்டாட்சியில் தலையிட்டு, தாமே சிறு நாட்டாட்சிகளாகத் தொடங்கின.
விஜயநகரப் பேரரசு 16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியி லிருந்து சரியத் தொடங்கிற்று. தலைநகரைத் தமிழகத்தின் வடபகுதியிலுள்ள சந்திரகிரிக்கு மாற்றி, பேரரசர் பெயரளவில் பேரரசராக நின்று, சிற்றரசர்போல ஒதுங்கி ஆட்சி செய்து வந்தனர். தமிழகத்தில் அவர்கள் கீழ் ஆண்ட தஞ்சைநாயகரும் மதுரைநாயகரும் வலிமை வாய்ந்த அரசர்களாயினர். அதுபோலவே கன்னடப் பகுதியில் மேல் கரையோரத்தில் இச்சேரி நாயகர்களும் மைசூர்ப் பகுதியில் உடையார் மரபினரும் பேரரசின் மேலுரிமையை உதறித்தள்ளி, தனியாட்சி நிறுவினர்.
பகமளிப் பேரரசிலிருந்து கிளைத்த அரசுகளில், வடக்கே அகமது நகரும், தெற்கே பீஜப்பூர், கோல்கொண்டா கியவையும் விஜயநகரப் பேரரசின் அழிவுக்குப்பின் வலிமையுற்று வளர்ச்சி அடைந்தன. பீஜப்பூர், தமிழ்க்கொங்கு நாட்டை நோக்கியும், கோல்கொண்டா தொண்டைநாட்டை நோக்கியும் தம் ஆட்சியைப் பரப்ப முயன்றன. இம்முயற்சிகளால் வி ஜயநகர அரசு பின்னும் நலிந்தது. தஞ்சை நாயகரும் வீழ்ச்சியுற்றனர். ஆனால், மதுரை நாயகர், மைசூர் உடையார், இச்சேரி, பேடனூர்த் தலைவர் ஆகியோர் வளம் பெற்றனர்.
பீஜப்பூர் சுல்தானிடம் ஷாஜி என்ற மராட்டிய வீரன் படைத்தலைவனாயிருந்தான். அவனும் அவன் புதல்வர்களான எக்கோஜியும் சிவாஜியும் தஞ்சை நாயகர் ஆட்சியில் தலையிட்டு, அப்பகுதியைக் கைக்கொண்டனர். தஞ்சையில் 18-ஆம் நூற்றாண்டு இறுதிவரை ஒரு மராட்டிய மரபு நிலைபெற்றது. சிவாஜி மற்றொருபுறம் மேல் கடலோரத்தில் கொண்காணக் கரையில் ஒரு மராட்டியப் பேரரசுக்கு அடித்தளம் இட்டான்.
சிந்து கங்கை வெளியில் 16-ஆம் நூற்றாண்டில் ஆப்கானியரை வென்று, மொகலாயர் பேரரசு அமைத்தனர். அகமது நகர் அரசு 17-ஆம் நூற்றாண்டிலேயே முகலாயப் பேரரசன் அக்பரால் விழுங்கப்பட்டிருந்தது. அவன்