பக்கம்:அமர வேதனை.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஒரு புத்தகம்

வாழ்க்கை

என்றொரு புத்தகம்;

பக்கங்கள் எத்தனை

யார் அறிவார்?

வெள்ளேத் தாள்களை

அள்ளிச் சேர்த்து

புத்தகம் எனத் தந்த

பித்தன் எவனோ

யார் அறிவார்!


ஒவ்வொரு உயிர்க்கும்

தனித் தனிப் புத்தகம்

மெள்ள மெள்ள அதை

முடிக்கும் வேலையும்

அவ்உயிர்க்கேயாம்!

நல்ல புத்தகம் ஆக்கும்

நபரும் யாரே யாம்?


பிள்ளைக் கிறுக்கல்,

கோடுகள்,கீறல்கள்,

குழப்பச் சித்திரம்;

ஓடும் நீரில்

ஆடும் பூச்சி போல்

எழுதிடு வண்ணங்கள்;

பொருந்தாக் கோலம்.

வல்லிக்கண்ணன்
33
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமர_வேதனை.pdf/35&oldid=1185875" இருந்து மீள்விக்கப்பட்டது