பக்கம்:அமர வேதனை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காலதேவா!

காத்திரு என்றாய்

காலமே!

நம்பினேன்;வாழ முயன்றேன்.

வருங்காலம் நமதே

எனும் நம்பிக்கை

என்னும் ஓர் தெம்பு தெம்பு வளர்ந்தது.


உன் இதயத் துடிப்பு போன்ற

கடியார டிக்கொலியும்,

உன் ஓட்டத்தை

அளவிட்டுக் கிழிபட்ட

காலண்டர் தாள்களும்

என்னை பாதித்ததில்லை.

நான் நம்பினேன்;

கனவில் வாழ்ந்தேன்.


நீ

மூடிய கண்ணனாய்

வறண்ட உளத்தனாய்,

உணர்விலா வெறியனாய்

ஓடினாய்,ஓடிகிறாய்

ஓடிக்கொண்டே இருக்கிறாய்!


காலமே!

வாழ்க்கை வெயில்

என் நம்பிக்கையை

பாழ் பண்ணிவிட்டது.


வல்லிக்கண்ணன்
39
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமர_வேதனை.pdf/41&oldid=1203788" இலிருந்து மீள்விக்கப்பட்டது