உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமர வேதனை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நான்

நான்
சோம்பலின் தொண்டனல்ல;
சுறுசுறுப்பில் எறும்பும் இல்லை.

நான்
தூங்கிக் கிடக்கவுமில்லை;
‘விழு விழு என்று’
வேளை செய்து
அலுப்புறவும் இல்லை.

நான்
குழந்தைப் போல்
எதிலும் அதிசயம் காண்பதால்,
வேடிக்கைப் பார்த்து
நின்று விடுகிறேன்.
ஓடும் கால உணர்வு அறிவேனில்லை.

நான்
மாணவன் போல்
படிப்பில் ஆர்வம் காட்டுகிறேன்;
அதனால் செயல்திறம்
மறந்து போனேன்.

நான்
கடவுள் போல்
கவலையை உதறினேன்;
களிப்பே கொண்டேன்.

1964

வல்லிக்கண்ணன்

45

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமர_வேதனை.pdf/47&oldid=1895978" இலிருந்து மீள்விக்கப்பட்டது