இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஒளி நன்று; ஒளியே அமுதம்
அது இனியது; வாழ்வு தருவது
உண்மை; நான் மறுக்கவில்லை.
வெள்ளம் பெருகி ஓடினும்
நாய் நக்கியே குடிக்கும்.
வெள்ளமாய் ஒளி
வெளியை நிறைக்கிலென்?
உள்ளக் குகையில்
இருட்டே இருந்தால்
உலகமும் இருளாம்...
விளக்கை ஏற்றினேன்
வெடித்துச் சிரித்தது பேரொளி
கிர்..ர்ர்..கிர்
என்ன இரைச்சல்?
ஏனிந்தச் சுழற்சி?
ஒரு ஈ
சுற்றுது!சுற்றிச் சுற்றி,
சுழன்று மோதி,
விழுந்து எழுந்து,
மேலும் சுற்றிச் சுற்றி மயங்குது.
குருட்டு ஈ
இருட்டில்லை எனினும்
வழி புரியலை அதுக்கு!
வல்லிக்கண்ணன்
57