இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வெளியெலாம் வெளிச்சம்.
அறையுளும் வெளிச்சம்.
நடுவிலே கதவு-அதில்
சட்டமிட்ட சதுரக் கண்ணாடி;
வர்ணமிலா வெறும் கண்ணாடி
அறைக்குள் ஒரு குருவி.
சிறகு விரித்துச் சிவ்வென்று பாயுது;
மோதி மீண்டும் பாய்ந்தது
மீண்டும் மோதி,
மீண்டும் மீண்டும்...
கண்ணில் குத்துது வெளியொளி;
கருத்தில் பதியலே இடைத்தடை!
வெளியின் ஒளி மட்டும் போதுமோ,
உள்ளத்தில் இருளே மண்டிக்கிடக்கையில்?
1960
அமர வேதனை