பக்கம்:அமர வேதனை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



வெளியெலாம் வெளிச்சம்.

அறையுளும் வெளிச்சம்.

நடுவிலே கதவு-அதில்

சட்டமிட்ட சதுரக் கண்ணாடி;

வர்ணமிலா வெறும் கண்ணாடி


அறைக்குள் ஒரு குருவி.

சிறகு விரித்துச் சிவ்வென்று பாயுது;

மோதி மீண்டும் பாய்ந்தது

மீண்டும் மோதி,

மீண்டும் மீண்டும்...

கண்ணில் குத்துது வெளியொளி;

கருத்தில் பதியலே இடைத்தடை!

வெளியின் ஒளி மட்டும் போதுமோ,

உள்ளத்தில் இருளே மண்டிக்கிடக்கையில்?

1960
அமர வேதனை
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமர_வேதனை.pdf/60&oldid=1181254" இலிருந்து மீள்விக்கப்பட்டது