பக்கம்:அமல நாதன்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

む3 அமல நாதன்

தான் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களே மன்னித்துத் தன் ஆன்மாவை இன்பவாரிதியில் நிலைக்கச் செய்யவேண்டிக்கொள்வது என்றும் சீர் மானித்து. விட்டான். பின்பு,

ஏதுபிழை செய்தாலும ஏழையே னுக்கிரங்கித் தீது புரியாத தெய்வமே-நீதி தழைக்கின்ற போரூர்க் தனிமுதலே நாயேன் பிழைக்கின்ற வாறு நீ பேசு என்று பாடி இறைவனைத் துதிக்கான்.

நான்காம் நாளும் தொடங்கியது. அன்றும் அவன் கண்முன் ஒரு படகு தோற்றம் அளித்தது. அவன் மனக்களிப்பைத் தாண்ட வருவதுபோல அப் படகும் அவன் நின்ற திசை நோக்கியே வரலா யிற்று. தன்னைத்தான் காப்பாற்ற அப்படகு வருவ தாக எண்ணிக் களிப்புற்ருன். அக்காவாயில் தானும் ஏறிக் கொண்டனன். அதில் இருந்த இரு வருள் ஒருவர் கம்மொழியில் பேசத் தொடங்கி னர். அப்பேச்சு இவல்ை அறிந்துகொள்ள இயல வில்ல்ை. இதைப் படகில் உள்ளவர்களும் அறிந்து கொண்டனர். அவர்கள் பேச்சில் அலே என்னும் சொல் ஒன்றுமட்டும் அவன் அறியக்கூடிய கிலேயில் இருந்தது. அதிலிருந்து அலே அடிப்பது சிறிது குறைந்தால் அடுத்த தீவை அடைய முடியும்போலும் என்று யூகித்துக் கொண்டான். அவ்வாறே நீர் நிலையை அணுகி அலே ஓய்வை - உற்று நோக்கினன். உடனே நிலப்பகுதி அவன் கண்முன் பட்டது. அதன் வழியே கடந்து அடுத்த இவை அடைந்தான் அமலநாதன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/57&oldid=687720" இலிருந்து மீள்விக்கப்பட்டது