பக்கம்:அமல நாதன்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வில்லை. அதல்ை அமலநாதனே வெறுப்புடன் பார்க் கனன். உடனே அமலநாதன் வாமனன் தன்னிடம் கொடுத்த வெள்ளிப்பெர்த்தானைக் காட்டியதும்,அமல. காதனிடம் அன்புதோன்ற உரையாடி, தருமன் என். பவன் இல்லத்தை அடைந்தால் வாமனனப்பற்றி அறியலாம் என்றும், வழியில் எவருடனும் எதையும் பற்றிப் பேசுதல் கூடாது என்றும் கூறித் கருமன் இல்லத்தை அடையும் மார்க்கத்தையும் கூறினன்.

குகன் மொழிப்படியே அமலநாதன் தருமன், இல்லம் காடிப் புறப்பட்டான். இடைவழியில் ஒரு மதப் பிரசாரகரைச் சந்தித்தான். அவர்மூலம் அர சாங்கக் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் ஏற்பட்ட பகை மைக்குரிய காரணங்களை அறிந்துகொண்டான். அவர் வயது முதிர்ந்தவர் ஆதலின், பொடிபோடும் பழக்கம் கொண்டிருந்தார். பொடி போடுபவர், பொடியை யாரைக் கேட்பது யாரைக் கேட்கக்கூடாது என்ப தைச் சிறிதும் யோசியாமல் கண்டவர்களே எல்லாம் கேட்பர் ; அப்படிக் கேட்கப்பட்டவர் பொடி போடு L1óf TfᎢ என்பதைப்பற்றிக் கவலைப்படமாட்டார் ஆகவே, மதப் பிரசாரகர் அமலநாதனைப் பொடி இருக்கிறதா என்று கேட்டார். அவனிடம் பொடி யேது? இல்லை என்று கூறிவிட்டான். அவனுடன் மகப் பிரசாாகர் கம் இல்லத்தை யடைந்தார். வீட்டிங் குள் நுழைந்து ஒரு டப்பி நிறைய வைத்திருக்க பொடியைத் தம் மூக்கில் அடைத்துக் கொண்டபிறகு அமலாகஃனத் தம் வீட்டில் தங்கி அன்று இரவு உண்டு, உறங்கிவிட்டுச் செல்லுமாறு வேண்டினர் அதற்கு அமலநாதன் சம்மதித்தான். கரும்பு தின்னக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/63&oldid=687726" இலிருந்து மீள்விக்கப்பட்டது