பக்கம்:அமல நாதன்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 அமலநாதன்

வன்கண்ணன் மகா கொடியன். எனவே,எனக்கு அமல நாதனைப்பற்றிய கவலை எதுவும் இல்ல்ை: அவனே என்ன வேண்டுமானலும் செய்துகொள்ளுங் கள் என்று கூறிவிட்டான். சரி அவனைச் சிறையில் வைக்க உனக்குச் சம்மதமா? அப்படிச் சிறையில் வைத்தற்கு ஏற்பாடு செய்ய என்ன பணம் கொடுக்கி முய்? என்று கேட்டனன். வன்கண்ணன் எப் படியாகிலும் சிறு தொகையைக் கொடுத்து அமல. நாதனின் தொந்தரவு இல்லாமல் இருக்கலாம் என்று கருதி, எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டான். உடன்ே வாமனன் அமல நாதன் உயிருடன் இருப் பது நல்லதா அன்றிக் கொல்லப்படுவது உன் விருப் பமா என்று கேட்டனன். இக்கேள்வி வன் கண்ண னைச் சிறிது இரக்கங் கொள்ளச் செய்தது. கான் ஆடாவிட்டாலும் தன் சகை ஆடும் அல்லவா? கன் அண்ணன் மகன் கொல்லப்படுவதை வன்கண்ணன் விரும்பவில்லை. பேச்சு ஒன்றும் எழவில்லை. வாம னன் வன்கண்ணனே நோக்கிப் பல கேள்விகளைக் கேட்டான். வங்க நாதனுக்கு எவ்வளவு பணம் கொடுத்து அமல காதனைக் கொண்டு போகச் சொன் ய்ை என்று கேட்ட்னன். அதன்பொருட்டு ரூ. 300 கொடுத்ததாக வன்கண்ணன் கூறினன். இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் வழக்கறிஞர் நல்லறிஞப் பிள்ளையும் வந்து கலந்து கொண்டார். அமல சாதனும உடன வகதனன.

இந்த ിങ്കിൽ வன்கண்ணனுக்கு என்ன செய் வது என்பது புரியவில்லை. இனித் தான் கப்பமுடி யாது என்பது புலனுயிற்று. வழக்கறிஞர் சொல்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/95&oldid=687758" இலிருந்து மீள்விக்கப்பட்டது