பக்கம்:அமிர்தம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தரிக்கு வீடு. சங்கரன் கிளைவ் விடுதியில் இருந்தான். என்லும், அடிக்கடி சுந்தரியைச் சந்தித்தான். அவளை விட்டு அரைக்கணமும் அவனால் பிரிந்திருக்க முடியாது என்பது போன்ற ஒர் உணர்வெய்தினன். வயதுவளர்ந்தது‚’அன்பும் வளர்ந்தது.

தோட்டத்துத் தென்றலில் மாங்குயில்கள் தீஞ்சுவைக் கீதம் எழுப்பும். இங்கே இந்த ஜோடிப் புறாக்கள் அளவளாவிப் பிரேம கீதம் இசைப்பார்கள். மலைக்கோட்டை மணி அவர்களது பேச்சின் எல்லைக்குக் கோடிட்டுக் காட்டும், பின்னர் பிரியாமல் பிரிவார்கள். பொழுது விடிந்தால் மீண்டும் சந்திப்பு-பிரிவு. இப்படி எத்தனையோ நாட்கள்-எத்தனையோ சம்பவங்கள் !

பரீட்சை எழுதிவிட்டுச் சங்கரன் ஊருக்கு வந்தான். அப்பொழுது தான் அந்த எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்தது. கல்யாணப் பேச்சு நடப்பதாக இருந்த நாளிலே இருதரப்புப் பெற்றவர்களிடையில் பழைய் விவகாரம் மொன்று முளைத்தெழுந்து ‘கோர்ட்’ படி ஏறிவிட்டது. அத்துடன் அவர்கள் ‘சம்பந்த’மும் முறிந்தது.

ஆணுல்,சங்கரனுக்கு உலகமே சூன்யமாகி விட்டதாகத் தோன்றிற்று. அப்போதைய நிலையில் அவன் தன் தாய் தந்தையர்க்கு எதிராக நடக்கவும் துணிவு கொள்ளவில்லை. எனினும், அவளை அவன் எங்கனம் மறக்கமுடியும்? அவளுடைய அன்புப் பார்வை; ஆதரவுப் பணிவிடை: அழகூறும் பேச்சு-இவற்றை அவன் எங்ஙனம் மறப்பான்? அவள் இதயம் பூசாவிலும் சுந்தரியல்லவா வாசம்செய்தாள்? ஆம்; அவள்தான் அவன் உலகம்!

அன்றைய அவர்களது பாசமும் பிணைப்பும் இரு வரையும் கணவன்-மனைவியாக ஜோடி சேர்த்திருக்க வேண்டியது.ஆனால் பந்தம்-விதி என்று கதைக்கின்றனரே.அந்த ஒரு தொடா்பு அவா்களைத் திசை வேறு திக்கு

வேறகப் பிாிந்தது. ஆம், அவர்களது வாழ்க்கைப் பாதையின் திருப்புமுனை.

10
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/12&oldid=1191455" இலிருந்து மீள்விக்கப்பட்டது