பக்கம்:அமிர்தம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கள். ஆனால் விதி எங்கள் வாழ்க்கையில் குறுக்கிட்டது.

திடீரென்று நல்ல ஆஸ்திதியுடன் இருந்த என் தந்தைக்குப் பலவிதங்களில் நஷ்டமேற்பட்டது. உலகத்தில் பணம் தானே ஜீவநாடி? ஆகவே எங்கள் எண்ணம் கைகூடாமற் போய்விட்டது.

 “உத்தியோகத்துக்கென்று வந்த உங்களைப்பற்றி விசாரித்தறிந்த நான் அப்போதே ஒர் இன்பக் கனவு கண்டேன். அதற்கு அனுசரணையாகவே மீனு உங்கள் மீது அத்யந்த அன்பு கொண்டிருக்கிறாள். எப்படியும் மீனுவை

உங்கள் வசம் ஒப்புவித்து மன நிம்மதியடைய எண்ணி உங்கள் தாயாரிடம் சொன்னேன். அவளும் சம்மதித்துவிட்டாள்.. .உங்கள் இருவர் ஜாதகங்களும் இழை. குறையாமல் பொருந்தியிருக்கின்றன. மனம் போலத் தானே மாங்கல்யம்’ என்னைக்கொண்டே உங்கள் அபிப்பிராயத்தைக் கேட்கச் சொல்லிவிட்டாள் உங்கள் அம்மா. அன்று பூர்த்தி பெருதிருந்த எங்கள் மனுேரதம் உங்கள் விஷயத்திலாவது நிறைவேறவேனும்... சம்மதம் தெரிவியுங்கள். வருகிற வியாழன் ரொம்பவும் பேஷான நாள். அன்றைக்கே நிச்சயதார்த்தம் செய்துவிடலாம்” என்றார் சுவாமிநாதய்யர்.

 அவர் கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஏதோ கனவில் நிகழ்வது போலவே தோன்றியது. சுந்தரேசனுக்கு. அன்று மதுரைக் கல்யாணத்துக்கு அவசியம் போய் வர வேண்டுமென்று அம்மாவிடமிருந்து வந்திருந்த கடிதத்தின் தாத்பர்யமும் அப்போது தான் அவனுக்குப் புரிந்தது. இவ்வளவு எளிதில்-இவ்வளவு சீக்கிரமாக மீனு தன்னுடையவளாக ஆகிவிடுவாள் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை.

அவன் அகக்கண்முன் மாயமோகினி மீனவுடன் தான்நடத்தப்போகும் இன்ப வாழ்க்கையின் காட்சிகள் எழுந்தன. அந்த நினைவில் அவன் இலேசாகச் சிரித்தது,கல்யாணத்துக்குத் தன்னுடைய பூரண சம்மதத்தைத். தெரிவிப்பது போலிருந்தது.

29
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/31&oldid=1195430" இலிருந்து மீள்விக்கப்பட்டது