பக்கம்:அமிர்தம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அவளுக்குக் கவலை மிஞ்சியது. பல கோடி நினைவுகள் அவள் பேதை நெஞ்சிலே விசவரூபமெடுத்தன.

அன்று அந்திசாயும் பொழுது; வடிவழகி கோவிலை நோக்கிப் புறப்பட்டாள். எங்கும் ஜனத்திரள் மண்டியிருந்தது. ஒரு பக்கம் குடைராட்டினம் சுழன்றது. அடுத்துச் சிலம்பு விளையாட்டு. மற்றாெரு பக்கத்தில் ‘சீரங்கம் தெரியுது பார்!; சென்னைப்பட்டணம் தெரியுது பார்!’ என்று பாடிப் படம் காண்பிக்கப்பட்டது. ஒரு பக்கம் பட்டிக்காட்டுப் பாவையரின் கும்மிச் சத்தம் காதைத் துளைத்தது.

ஆச்சு!

அற்புத சோடனை செய்திருந்த தேர் ஊர்வலம் புறப்பட ஆயத்தமாக நின்றது. மறுவினாடி வடிவழகியின் பார்வை திசை திரும்பியது; திடுக்கிட்டாள், தூண்டில் போடப்பட்ட மீன் குஞ்சுபோல. ஏராளமான ஆடுகளும் கோழிகளும் அம்மனுக்குக் ‘காவு’ கொடுக்க நிறுத்தப்பட்டிருந்தன. தலை முழுதும் மஞ்சள் பூசியிருந்தது. கழுத்தில் பூமாலை. பூசாரி சாம்பான் கையில் தீட்டிய அரிவாளுடன் உச்சாடனம் பெற்றவனைப்போல. உறுமினான்; பயங்கரமாக விழித்தான் என்ன சொன்னேன்? உச்சாடனமா? ஹஹ்ஹா! சுத்த ஹம்பக்! பாவம், கள் இல்லாததால் முன் சாத்து அவனிடமில்லை.

வடிவழகி திகைத்து விட்டாள். அந்தோ, சாவின் சங்கிதியில் நின்றஅத்தனை வாய் பேசமாட்டாத உயிர்களையும் ஒருவிசை ஏறிட்டு நோக்கினாள். ‘கருணை பொழியும் கடலாகிய அந்த ஜகன்மாதாவா, கருணையின்றிக் கொடை கேட்கிறாள்? கோழி தன் குஞ்சை எங்ஙனம் தின்ன விழையும்?’

“தன்முன் எமன் வடிவில் நின்றுகொண்டிருக்கும். பூசாரியை ஏமாற்றி எப்படியாதிலும் அவ்வளவு உயிர்களையும் காப்பாற்றி விட்டால்...ஆகா!” அவள் ஆவல் அது. ஆளால் முடியுமா?

36

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/38&oldid=1319064" இலிருந்து மீள்விக்கப்பட்டது