பக்கம்:அமிர்தம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

   எதிரே திரும்பினாள். வீரப்பனைச் சுற்றி நாலைந்து தொண்டர்கள் பலி செய்யும் கொடுமையை விவரித்தனர். புத்தர்,சமணமுனி, காந்தி மகாத்மா போன்ற பெரியோர்களின் பொன்மொழிகளை அவர்கள் கூறக்கேட்ட வடிவழகி வின்- சூழவிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஒவ்வொருவரின் கண்கள் நீரில் நீந்தின.
    பறைஒலி வானளாவியது,கொம்பு முழங்கியது.கோவில் அடிமைக்காரர்கள் அம்மனுக்கு என ஒவ்வொரு ஆண்டு கொடுக்கும் பலியை நிறுத்த ஒப்பவில்லை, வீரப்பன் தனித்து எவ்வளவோ மன்றாடினான்; பயனில்லை.
    பூசாரி முதல் ஆட்டின் தலைக்கு நேராகப் பளபள வென மின்னிய வாளை ஏந்தப் போனான். அந்தப் பொறி தட்டும் நேரத்தில் வீரப்பன் ஓடிப்போய் நின்றான். வாள் பிடித்து நின்ற பூசாரியின் முன். அவ்வளவு தான். வடிவழகிக்கு உயிர் தத்தளித்தது; அவளும் ஒரே பாய்ச் சலில் பாய்ந்து ' அத்தான் ' என்று அலறிவிட்டாள்.
   " அத்தான், நம்ம ரெண்டு பேருமே காளிக்குப் பலியாகிப் போயிடுவோம். அப்புறம் அந்த வாய் பேசாத பிராணிகளாச்சும் உயிர் தப்பட்டும்.-” என்றாள் வடிவழகி, . 
    கூட்டத்திடையே மயான அமைதி நிலவிற்று. கோவில் காரர்கள் சிலையாகி நின்றார்கள்.
    அதே சமயம் தேரின் முன்பாக வந்து நின்ற ஜீப்பி லிருந்து போலீஸ்காசர்கள் இறங்கினார்கள். அப்போது தான் வீரப்பனுக்கு மலர்ச்சி ரேகை விட்டது. வடிவழகி  அதிசயித்தாள்.
  " தெய்வங்கள் பெயரால் செய்யப்படும் அநீதிகளில் பலி மிகவும் கண்டனத்துக்குரியது. எந்தத் தெய்வமும் இம்மாதிரி சத்தபலியை விரும்புவதுமில்லை; ஏற்கவும் ஏற்காது. தங்கள் - தங்கள் பிரார்த்தனைகள் நிறைவேறிவிட்டால் உடனே கொடை கொடுப்பதாக வேண்டுகிறார்கள் குருட்டு நம்பிக்கை கொண்டு. ஆனால் இந்த உயிர்கள்

37

37

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/39&oldid=1333030" இலிருந்து மீள்விக்கப்பட்டது