பக்கம்:அமிர்தம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முன் அச்சாரமா எதாச்சும் கொஞ்சம் பணம் கொடுத்தாத் தான் மருந்து கொடுக்க முடியுமாம். அதுக்குத்தான் உங்க கிட்டேக் கொஞ்சம் பணம் வாங்கிட்டு போவலாமின்னு வந்தேன். என் வீட்டுக்காரர் இருக்கிறப்ப எதுக்கு இப்படி வந்து பணம் கேட்கணுமின்னுதானே தெகச்சுப் போயிட் டிங்க? உங்களுக்கு அவரைப்பத்தி ஏதும் தெரியாதா? அவர் மனைமிதிச்சு என்னோடே பேசி, மகளே எடுக்கி, மாசம் ஒண்ணுக்கு மேலே ஆகுது. பொழுது விடிஞ்சு பொழுது போனா எந்த நேரமும் அவருக்குச் சீட்டாட்டம்தான் பொழப்பு. குளத்தங்கரைச் சாயாக் கடைதான் அவருக்கு அடைக்கலம். காலம்பற வீட்டுக்கு வந்தப்பப் பிள்ளைக் முடியலேன்னு சொன்னேன். அவர் எம்மேலே எரிஞ்சு விழுந்து அஞ்சு ரூவா அவசரமா வேணுமின்னு கேட்டாரு. அந்தப் பணத்தைக் கொண்டாச்சும் ஏதாச்சும் வைத்தியம் செய்யலாமின்னு நினைச்சிருந்த என் எண்ணத்திலே மண்ணே வாரிப் போட்டுட்டாரு. பணத்தைக் கைப்பத்தியதுமே மறு பேச்சாடாமல் கிளம்பிட்டாரு. இப்படித்தான் ஒவ்வொரு சமயமும் உயிரைக் கையிலே பிடிச்சுட்டு அவர்கிட்டே நடக்க வேண்டியிருக்குது. குடிகாரன் கணக்காப் பசிச் சப்போ வராரு; சாப்பிட்டுட்டுப் போயிடுறாரு. மேலுக்கு முடியாமக் கிடக்கிற பெத்த மகளைப்பத்திக் கூடக் கவலை கிடையாது பாவி மனுசனுக்கு. அத்தான், உங்க குழந்தையின்னு நினைத்து மனசு இளங்கி ஒரு அஞ்சு ரூவா காசு கொடுத்திங்கன்னா கோடிப் புண்ணியமுண்டுங்க.”

விம்மிப் பெருமூச்செறியச் சொல்லி நிறுத்தி பொன்னாருவி வாய்விட்டு அழுதாள். தங்கவேலிற்கும் கண்களில் கண்ணிர் கொட்டியது. கண்ணுக்குக் கண்ணான தன் மகளின் காய்ச்சலப் பற்றிக்கூடக் கவலையின்றிச் சீட்டாடிய வண்ணமிருக்கும் அவள் கணவன் காசிலிங்கத்தின் பேரில் அவனுக்குக் கரைகடந்த ஆத்திரம் பொங்கிஎழுந்தது.அத்துடன் எப்படியாவது அவனை நல்வழிப்படுத்திவிட வேண்டும் என்ற எண்ணமும் உதித்தது.

49

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/51&oldid=1313490" இலிருந்து மீள்விக்கப்பட்டது