பக்கம்:அமிர்தம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொன்னுருவிக்குக் கொடுக்கப் பணத்திற்கு எப்படி ‘மால்’ பண்ணுவது என்று யோசிக்கையில், சில நாள் முந்தித் தன் மனைவிக்குச் சேலை வாங்க ஐந்து ரூபாய் பணம் கொடுத்து வைத்தது ஞாபகம் வந்தது.

“பொன்னுருவி! கருக்கல்லே பணத்தைக் கொண்டாந்து தந்து வைத்தியர் கிட்டேயும் சொல்றேன். மனசு கலங்காதே! உன் புருசனும் சீட்டாட்டத்துக்குத் தலை முழுக்குப் போட்டு, நல்லபடியா குணம் திருந்திடுவான், ஆயி கிருபையாலே. கவலைப்படாதே! ராவிலே புள்ளையைக் கவனமாப் பாத்துக்கோ!” என்றான் தங்கவேல்.

“அத்தான், மகமாயி புண்ணியத்திலே உங்களுக்கு ஒரு குறைவும் வராது. உங்களைத்தான் அண்ணேக்கும் நம்பினேன்; இப்பவும் நம்பியிருக்கேன். படபடக்கும் மனசிலே பால் வார்க்கச் செஞ்சிடுங்க. புள்ளே தனியாக் கிடக்கும்...நான் வரட்டுமா அத்தான்?” என்று விடை பெற்றுச் சென்றாள் பொன்னுருவி. பித்துப் பிடித்தவன் மாதிரி அவள் போன வழிமீது விழி பதித்து நின்று கொண்டிருந்தான் தங்கவேல்.

பொன்னுருவியின் வீட்டுக்குப் புறப்பட யத்தனப்பட்டுக் கொண்டிருந்தான் தங்கவேல். உறவு என்ற ஓர்மையில் ஓரளவு பாத்தியதை கொண்ட பொன்னுருவிக்குத் தான் செய்யவிருக்கும் உதவியை நினைத்து அவன் பூரித்துப்போனான்.

“வள்ளி!” என்று அழைத்த தங்கவேல், இாவு செய்துகொண்ட தீர்மானப்பிரகாசம் வள்ளியிட ம் சேலைக்குக் கொடுத்த பணத்தைத் திருப்பிப் பெற எண்ணினான், மறுமுறையும் மனைவியை அழைத்துப் பார்த்தான். அவளைக் காணோம்.

அவசரமாக வெளியே வந்து பார்த்தான். அப்போது தான் காசிலிங்கம்-பொன்னுருவியின் புருஷன், விர்ரென்று விரைந்து சென்றது தெரிந்தது. அவன் வள்ளியிடம்

50

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/52&oldid=1313497" இலிருந்து மீள்விக்கப்பட்டது