பக்கம்:அமிர்தம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திரும்பினாள் அவள். சுருள் சுருளாக நெளிந்திருந்த அவள் கேசம் சரிந்து கிடந்தது. அதே தருணம் லதாவின் நினைவு நெஞ்சைத் தட்டியெழுப்ப நிலையை உணரலானேன்.

“தாங்கள் அதற்குள்ளாகவே ஆபீஸிலிருந்து திரும்பி விட்டீர்களே. நான் பள்ளிக்கூடம் விட்டு வந்து இன்னும் பத்து நிமிஷங்கூட ஆகவில்லை” என்று வழக்கம் போல அன்பு குழையக் கேட்டாள்.

ஆனால் என் உண்மை நிலையை அவள் எவ்விதம் அறிய முடியும்? மனமறிந்த வகையில் உண்மைக்கு உரையிட்டு ஏதோ உளறி வைத்தேன். நம்பிவிட்டாள் சுஜாதா.

கொஞ்சநேரம் சென்றதும், வேலை காரணமாக தன் அறைக்குப் போய்விட்டாள். சந்தர்ப்பம் சமயத்தில் உதவ லதாவின் கடிதத்தை மீண்டும் ஒருமுறை புரட்டினேன்.

அன்புள்ள அத்தான்

பர்மாவில் குமுறிப் புரண்ட பாழும் யுத்தத்தின் காரணமாக இதுகானும் கொந்தளித்துக் குழம்பிய யுத்த அலறல் இன்றைய நிலையில் ஏதோ ஓரளவு அடங்கி விட்டதெனலாம்.

பர்மாவிற்கு பெற்றாேர் சகிதம் புறப்பட்டபோது அழுத கண்ணும் சீந்தின முக்குமாக நின்ற என்னை சமாதானப்படுத்தினீர்களே, நினைவிருக்கிறதா? நாங்கள் சென்ற சில மாதங்களுக்கப்புறம்தான் யுத்தம் தொடங்கிவிட்டதே!

தங்களது அன்புத் தொடரில் இணைத்துப் பிணக்கப்பட்டுள்ள லதா அடுத்த வெள்ளிக்கிழமை புறப்பட்டு வருகிறேன். ஸ்டேஷனில் சந்தியுங்கள்.

தங்கள்
லதா

புதைந்து கிடந்த எண்ணங்களை கிளறி விட்டுவிட்டாள் என் அத்தை மகள் லதா. கடந்த ஆண்டுகளை நோக்கிப் பின் சென்றது மனக் குதிரை. உள்ளம் பழைய நினைவில் ஆழ்ந்தது.

ப்பொழுது லதாவிற்கு வயது பத்திருக்கும். நான் அவளைவிட மூன்று ஆண்டுகள் மூத்தவன்.

57

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/59&oldid=1313489" இலிருந்து மீள்விக்கப்பட்டது