பக்கம்:அமிர்தம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ருசிகரமான நாவலொன்றின் பக்கங்களைப் போல வாழ்க்கை நடந்தது. மனிதன் பழக்கத்துக்கு அடிமை என்ற உண்மையை அன்று தான் புரிந்துகொண்டேன். அந்தச் சமயத்தில்தான், சிற்சில சமயங்களில்'என் நினைவின் நிழலினின்றும் விடுபட்டிருந்த என் அத்தை மகள் லதா விடமிருந்து தபால் பறந்து வந்தது.

ன்று ஆபீஸிலிருந்து வந்துகொண்டிருக்கையில்,காலை மாலை காணப்போகும் லதாவைப்பற்றி எண்ணமிட்டுக் கொண்டு வந்தேன். வாசலில் வண்டி ஒன்று நின்றது. ‘குமார்’ என்ற குரல் கேட்டுத் திரும்பினேன். சுஜாதா வருத்தம் தோய்ந்த முகத்துடன் நின்றுகொண்டிருந்தாள். காணத்தைக் கேட்டேன் பதட்டத்துடன். பதில் எதுவும் சொல்லவில்லை. அவள் விழிகளில் கண்ணிர் தேங்கியது. பேசாமல் என்னிடம் ‘டைப்’ செய்திருந்த காகிதம் ஒன்றை நீட்டினாள். படித்தேன்; தலை சுழன்றது. அவளை மாயவரத்துக்கு மாற்றிவிட்டார்கள். விரைவில் சென்று ‘சார்ஜ்’ ஒப்புக்கொள்ளவேண்டுமாம்.

சுவர்க்கத்துக்கு ஏறிய நூல் அறுந்துவிட்டது!

“குமார், என்னை மறந்துவிடமாட்டீர்களே” என்றாள் விம்மியவண்ணம். கபடமற்ற அவளது உள்ளத்தினின்றும் கிளம்பிய இக்கேள்வி கல்லினும் கடிய என் மன்த்தில் அம்பெனப் பாய்ந்தது, லதா போட்டிருக்கும் லெட்டர் பற்றி ஏதேனும் தெரிந்திருந்தால் இப்படி அவள் கேட்பாளா?

“ஏன் இவ்வித சந்தேகம் சுஜாதா? முன்பின் அறியாதிருந்த நாம் ஒன்றுகூடினோம். பின். இப்படி எதிர்பாராமல் பிரிகிறோம். ஆனால் எப்படியும் திரும்பவும் பிரிந்த நாம் சந்திப்போம். வருந்தாதே. அம்மாவைக் கவனமாகப் பார்த்துக்கொள். ”

மேலே பேசமுடியாமல் கண்ணீர் தடைப்படுத்தியது.

60

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/62&oldid=1313457" இலிருந்து மீள்விக்கப்பட்டது