பக்கம்:அமிர்தம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தோளில் சாத்தி வைத்திருந்தான். பொக்கை வாயைத் திறந்தவண்ணம் தன்னையும் மறந்துவிட்டுச் சிரித் து க் கொண்டிருந்த தன் மகளைக் கவனித்தாள் பூங்கொடி. அவளுக்கு ஆச்சரியமாயிருந்தது. குழந்தைக்குப் புதிதாக அழகாக மின்னும் ஐரிகை கவுன் ஒன்று போட்டிருந்தது.

“ஆமா, சட்டை புதுசா இருக்கே இனனிக்கு. வாங்கினிங்களா, விலை ரொம்ப அதிகமாயிருக்குமே”

“பூங்கொடி, நேத்திக்கு நம்ப தமிழ் நாட்டிலேயிருந்து புதுசா ஒருத்தர் இந்தக் கப்பலிலே வந்திருக்காரு. ரொம்பத் தங்கமான குணம். அந்த அண்ணன் வாங்கித் தந்ததுதான் இந்தப் பட்டுச் சரிகை போட்ட சட்டை. பழகினது ரெண்டு நாழிகையாச்சும் இருக்குபோ என்னவோ; அதுக்குள்ளே ரெண்டு வருசம் தோளுக்குத் தோளாப் பழகிவிட்டது மாதிரி அவ்வளவு சிநேகிதமாகிட்டோம் நாங்க. கடையிலே நம்ப கண்ணுவைக் கண்டதும் சிலை கணக்கா ஏனோ அப்படி நின்னுட்டாரு. புள்ளையை எங்கிட்டேயிருந்து வாங்கி முத்தங் கொஞ்சி எம்பிட்டு பலகாரம் வாங்கிக் கொடுத்தாரு தெரியுமா? பார்த்தியா, அதுக்குள்ளே மறந்திட்டேன். நான், நம்ப கண்ணு , அந்த அண்ணன் மூணு பேருமா சேர்ந்து ‘படம்’ எடுக்கணும்னு பிடியாய் பிடிச்சாரு. இதோ பாரு படத்தை” என்று சொல்லி சட்டைப் பையிலிருந்து புகைப்படத்தை எடுத்து நீட்டினன் பூங்கொடியிடம்.

படத்தைப் பார்த்ததுதான் தாமதம். அவள் கண்கள் கலங்கிவிட்டன.

“பூங்கொடி, என் இப்படி மலைச்சுப்போய்கின்னுட்டே பேயடிச்சவ கணக்கா படத்தை என அப்படி முழிச்சுப் பார்க்கிறே, அந்த அண்ணனே முந்தியே ஒனக்குத் தெரியுமா? எதுனாச்சும் சொந்தங் கிந்தம் உண்டா?”

நெஞ்சை அழுத்திக்கொண்டு கேட்டான் கந்தன்.

“அவளைத் தெரியுமுங்க. அவரை எங்கே காண முடியும்?”

74

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/76&oldid=1319085" இலிருந்து மீள்விக்கப்பட்டது