பக்கம்:அமிர்தம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மின்னல் கொடி படரும் ஒரு வினாடியில் என்ன தோன்றிற்றாே, பாட்டு முடிவதற்குள் திடீரென்று மூர்த்தி எழுந்து வெளியே போய்விட்டான். இதைக் கண்ட வாஸந்தி தணலைத் தீண்டியவள் போன்று நடுங்கிப்போனாள். தன் அத்தானின் இத்தகைய செய்கை வியப்பை அளித்தது. அவள் மனம் அஞ்சி அதிர்ந்தது.

ந்தச் சம்பவத்தைக் குறித்து அதன்பின் தம்பதிகளிடையே எவ்வித வியாக்யானமோ, அல்லது சமாதான உடன்படிக்கையோ உதயமாகவில்லை; நிகழவுமில்லை. அப்புறம் ஒன்றிரண்டு நாட்கள் வழக்கம்போல வந்தன, ஓடிவிட்டன. அன்றாடம் நடக்கும்—நடக்கவேண்டிய சிரிப்பும் கேளிக்கையும் இடம் பெற்றன; களித்தனர்.

ன்று இரவு மூர்த்தி வெளியே சென்றிருந்த சமயம் வாஸந்தி தனித்திருந்த அவ்வீட்டின் பயங்க அமைதி அவளை என்னவோ செய்ய ஆரம்பித்தது. அன்று வீணை வாசிக்கையில் நிகழ்ந்த சலனம் அவள் மனத்தில் அப்படியே ஆழப் பதிந்திருந்தது. காரணமின்றி அரைகுறை வாசிப்பில் அவ்விதம் மூர்த்தி திடுதிப்பென்று வெளியே எழுந்து சென்றதன் அர்த்தம் மர்மமாகவே பட்டது வாஸந்திக்கு நேரில் கணவனிடம் இதைப்பற்றிக் கேட்கவும் விரும்பவில்லை. இருப்பினும் தன்னைப்பற்றி ஏதாகிலும் தவறுபட எண்ணிவிட்டிருப்பாரோ—? அவள் மனம் ஒரு நிலையில் அடங்காத அலை பாய்ந்து தத்தளித்தது.

அன்று வீணை வாசித்துக்கொண்டிருக்கும்பொழுது அவள் பட்டபாடு அவள் ஒருவளே அறிவாள். திரும்பவும் வீணையை மீட்டிவிட்டதும், தன் தமக்கையின் நினைவு அவள் இதய வீணையையே நெருடிவிட்டதை மூர்த்தியால் உணர்ந்திருக்கமுடியுமா? ஒவ்வொரு தவணையும், கானம் கூட்டும் சமயம் அவள் உயிரே போய்த் திரும்பும். கண்கள்

82

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/84&oldid=1322891" இலிருந்து மீள்விக்கப்பட்டது