பக்கம்:அமிர்தம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாணிக்கமாட்டம் தோணுது. அந்தநாளிலே உன்னேடே பேசிப்பழகியதைத் தப்பா நினைச்சு உன் அப்பா என்னைத் தூஷணையாப் பேசினர். ஆனா இந்த விளக்குக்குப் பொதுவாச் சொல்றேன், உன்னைப்பற்றி எனக்கு எந்தவிதமான கல்மிஷமும் கிடையாதுங்கிறதை நீயாச்சும் உணராமலா இருந்திருப்பாய்? உன்னை-என்னைக்கு முதல் முதலிலே கண்டேனோ, அப்பவே எனக்குப் புதுத் தெம்பும் உயிரும் வந்திருச்சு. உன்னேப் பார்த்ததும், காய்ச்சலிலே செத்துப்போன என் தங்கச்சியே மறு பிறவி யெடுத்து வந்திருப்பது கணக்கா நினைச்சுப்பிட்டேன். என் தங்கச்சி மாதிரியே அசலா இருக்கு உன் முகச்சாயல்”. அவன் கண்களில் கண்ணிர் மிதந்தது.

‘தங்கச்சி’ என்ற பாசம் நிறைந்த அழைப்பைக் கேட்டதும் ‘அண்ணாச்சி’ என்று பதில் விடுத்தாள் பூவாயி, புதையல் எடுத்த பொருள்போலப் பூவாயியை அழைத்துக் காதோடு காதாக ரகசியம் பேசினான் கண்மணி. அதைக் கேட்டதும். பூவாயிக்கு வாயெல்லம் பல்லாகப்பரிணமித்து விட்டது. அவளுக்கு உடம்பு புல்லரித்தது!

பூவாயியும் கண்மணியும் பிரமாதமாக அப்படி என்ன ரசகசியம் பேசிவிட்டார்கள் என்று தானே எண்ணுகிறீர்கள்? அடுத்தநாள் ஐயனார் கோவில் திருவிழாவிற்கெனக் கண்மணி தன தங்கச்சியை வரவழைத்தான். அவள் பெயர் அமிர்தம். அழகுப் பாவையான அவளைக் கண்டதும் மாணிக்கம் அப்படியே சொக்கிவிட்டான். தங்களுடன் மாணிக்கம் என்றுமே தங்கவேண்டுமென்பது அவர்களது ஆசை. அதற்கு அமிர்தத்தை அவனிடம் ஒப்படைக்க முடிவிட்டார்கள் துணைவனும் துணைவியும்.

95

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/97&oldid=1320963" இலிருந்து மீள்விக்கப்பட்டது