பக்கம்:அமிழ்தின் ஊற்று (கவிதை).pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


கண்மலர் தேன்சிட் டைப்போல்
களிப்புடன் சிறக டித்து
மண்மலர் காட்டர் இன்பம்
மனத்திலே கூட்டிற் றன்பே !
விண்மலர்ச் சிரிப்பும் ஒப்போ!
வியப்படா கண்ண ரும்பு!
பண்மலர் தநதாய் போதும்
பாசமே கண்ணு றங்காய்!

மண்ணுல கின்பக் தந்தாய்
மானுடன் அமர னுனேன்
விண்ணுல கின்ப மெல்லாம்
விணடா உன்அன் பின்முன்
எண்ணுல கின்பக் காட்சி
இருவிழி. மூடிக் காண்பாய்
பெண்ணுல கிருந்து வந்த
பெரும்பேறே கண்ணு றங்காய் !

14