பக்கம்:அமிழ்தின் ஊற்று (கவிதை).pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


அன்னையின் மடிஇ ருந்து
வந்தனை அவள்உள் ளத்தே
என்றுநீ புகுந்தாய் ? தந்தை
இதயத்தில் உலவி ளுயோ ?
என்னென்ன கண்டாய் ? அன்னைர்
எழிலினை மாந்தி வந்தாய் !
மின்னிய உளங்கண் டாயோ
மேலோனே கதையைச் சொல்லு !

உலகத்து மொழிக் ளெல்லாம்
உன்னுடை மொழிக் ளன்ருே
உலகத்துப் பொருள்க ளெல்லாம்
உன்னுடை பொருள்க ளன்ருே
உலகத்து உயிர்கள் எல்லாம்
உன்னுடை உறவும் அன்ருே
உலகத்து நாய கன்நீ
உரையாயோ கதைகள் கோடி!

26