பக்கம்:அமிழ்தின் ஊற்று (கவிதை).pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


மூவேந்தர் ஆண்ட இந்த
முத்தமிழ்த் திராவி டத்தே
பாவேந்தர் கனவை எல்லாம்
மெய்ப்பித்தார் பாங்கென் சொல்வேன்
சாவேந்தும் ஆளி யர்கள்
சஞ்சலச் சுனையாய்ச் செய்தார்
கோவேந்தே! குடிவி ளங்க
சிறுபறை கொட்ட டாநீ !

கல்தோன்றி மண்தோன் ருத
காலத்தின் முன்பே தோன்றி,
தொல்புகழ் வீரம் ; கல்வி ;
தூய்தமிழ் ; வாழ்க்கை : செல்வம்
எல்லையின் றிருந்த நாட்டில்
ஏற்றினர் வஞ்ச னைத்தீ !
கொல்லேறே ! தமிழர் ஒங்க
சிறுபறை கொட்ட டாநீ !

28