பக்கம்:அமிழ்தின் ஊற்று (கவிதை).pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


தங்கத்தின் குன்றெ டுத்துக்
கைவல்ல தச்சன் ஞால
மெங்கெங்கும் சிறந்து யர்ந்து
மின்னிடும் வைரங் கூட்டி
பொங்கிப்பல் கலைவ ளர்க்கும்
புத்தொளிக் கல்லி ழைத்து
மங்கையின் கனவாய் வந்த
மணித்தேரை இழுத்து வாராய் !

பொங்கிடும் கடலுக் கப்பால்
பொற்கன வாயி ரம்போல்
மங்கல வாழ்த்துப்பாடி
ஞாயிறு மகிழ்ந்தெ ழும்பும்
இங்கந்தக் காட்சி தன்னை
ஈருயிர் கலந்த வாழ்வே
சங்கத்துத் தமிழாய்க் கண்டேன்
தரளத்தேர் இழுத்து வாராய் !


மான்விழி அச்சகம், சென்னை, 2.