பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

 தெய்வம், குருவாயூரப்பனின் திருவருள் துணையுமே என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். இந்நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களுக்கேற்ப சுரதாளக் குறிப்புக்கள் எழுதி உதவிய சங்கீத வித்வான் ஏ.ஆர். கண்ணன் அவர்களுக்கும், இந்நூலே உருவாக்கி, அதன்மூலம் எனக்கும் பெருமை தேடிந் தந்த பெருமதிப்பிற் குரிய கவிஞர் அவர்களுக்கும் எனது இதய பூர்வமான நன்றி உரியதாகும். - - 'அமுதத் தமிழிசை"யிலுள்ள அற்புதமான பாடல்களை சங்கீத விதவான்கள் அனைவரும் விரும்பியேற்று, மேடைகள் தோறும் பாடிப் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். அதுஒன்றே எங்களின் உழைப்பிற்குக் கிடைத்த ஊதியமாகக் கருதி மகிழ்ச்சியும் மனநிறைவும் கொள்வோன், நன்றி! - குருவாயூர் நிலையம். வணக்கம் 5.சாரதாபுரம், குருவாயூர் பொன்னம்மாள் மயிலை-சென்னை-4. - 3-8-80 தொலைபேசி எண்:75372. l -