பக்கம்:அமுதவல்லி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114 அமுத வல்வி __________________________________

  "அம்மா, நான் அனாதை. என்னைப் பெத்த ஆத்தா பிறந்த மேனியா என்னை காட்டிலே அனா தையா வீசிப் போட்டுப் பிட்டுப் போயிட்டாங்களாம்; வழியிலே கண்ட வங்க என்னை வளர்த்து ஆளாக்கினாங்க, யாரோ ஒருத்தன் ஆசைக் காட்டி எங்க அம்மாவை ஏமாத்திப்புட்டானாம்; அதினாலே தான் என் தாயார் என்னை அனாதை யாக்கிப் புட்டாங்க போலே!... என்னைப் பெத்தவளை என் தாயை ஒரு தடையாச்சும் கண்டாத்தான் என் ஆவி வேகும். ஆனா, ஈவிரக்கம் இல்லாம என்னை வீசிப்புட்டுப் போன ஆத்தாவுக்கு நல்ல தண்டனை கொடுக்கவும் கொடுப்பேன் ... என்னைப் பெத்தெடுத்த அம்மாவை ஏமாத்தின அந்த மனுசனை...ம் அப்பனை எப்போ கண்டாலும் அப்பவே கண்டந் துண்டமாச் சீவிப் போடுவேன், அவன் படம் எங்கிட்டே தான் இருக்கு; எங்க அம்மா படங்கூட வச்சிருக்கேன்: என்னை வளர்த்த வங்க கொடுத்திருக்காங்க!..."
  பையனின் கண் இமைகள் நனைந்து ஈரமாயின.
   அவனுக்குத் தெரியாமல் பொன் னரசி நேத்திரங்களைத் துடைத்துக் கொண்டாள். சிறுவனுக்குப் பக்கமாகக் கிடந்த முடிச்சிலிருந்து தலை நீட்டிய புகைப்படங்களை எடுத் தாள். ஆம் ; ஒன்று அவள் படம்; இன்னொன்று கந்தசாமியின் நிழலுரு, மறுபடியும் அவற்றை முடிச்சுக்குள் திணித்தாள்.
    கடவுளே, நீ ரொம்ப நல்ல சாமி என் ஆசை நிறைவேறிடுச்சு... இம்பிட்டு நாளா நான் பட்ட பாடு வீண் போகலை. என்வைரியை பழி வாங்கிறதுக்கு என் மகன் கிடைச்சுப்புட்டான்! ...,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/116&oldid=1379201" இலிருந்து மீள்விக்கப்பட்டது