இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
116 அமுதவல்லி __________________________________
தாய்க்கு வைத்த குருதிக் குங்குமம் அச்சமுறத் துலங்கிக் கொண்டிருந்தது.
"பொன்னரசி. என்னை மன்னிச்சிப்பிடு. இப்போதே என்னோட வந்திடு. நான் உன்னைக் காப்பாத்துறேன்... நம்ம மகனையும் கண்டு பிடிப்போம்...!” என்றான் அவன் - கந்தசாமி.
பொன்னரசி கையிலிருத்த கத்தி மின்னியது. ரத்தக் காட்சியைக் கண்டதும் அவள் மனத்தில் புயல் நீங்கிய அமைதி கனிந்ததோ? கத்தி நழுவியது. பையனுடைய கையைப் பிடித்து அழைத்து வந்தாள் “பாவம்; மன்னிச்சிடு; அந்த ஆள் எக்கேடு கெடட்டும்" என்று வேண்டினாள் அவள்.
புழுதி வழியே ரத்தத் துளிகள் சுவடு காட்டிக் கொண்டேயிருந்தன.
“அப்பனைக் காட்டினிக; என் ஆத்தாவையும் காட்ட மாட்டிங்களா, அம்மா?" என்று விம்மிய பையன் அவளைப் பரிதாபம் இழையோடே நோக்கலுற்றான்.
"தம்பி, பழிக்குப் பழி வாங்கத் தானே உன் அம்மாவை நீ இப்ப தேடுறே?...” .
“ஊஹகும் அவங்களை மன்னிச்சிடுவேன்; அவங்க என் தாய்!". . .
அடுத்த கணம் என்ன எண்ணினானோ, தன் முடிச்சிலிருந்த புகைப்படத்தை எடுத்துப் பார்வை யிட்டான் அவன்.
“ஆத்தா...!”
நெஞ்சில் பாய்ச்சிக் கொள்ள ஓங்கிய கத்தியைத் பிடுங்க முனைவதற்குள், செந்நிறம் பீறிடத் தலைப்பட்டது.