பக்கம்:அமுதவல்லி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். அறுமுகம்

123


மிஞ்சின இந்த வீரமுத்துவை, உம்புட்டு முறை மச்சானான என்னைக் கள்ளச் சாராயம் குடிக்கிறவன் என்னும் படியான ஒரு அற்ப சொற்பமான காரணத்தை வச்சுத் தட்டிக் கழிச்சுப் பூட்டு, எவனோ புறம் போக்குப் பயமவன் ஒருத் தன் கட் டின மஞ்சள் தாலியிலே கும் மாளம் போட்டுக் கிட்டு இருக்கிற உனக்குத் தாலிப் பொசிப்பு இன்னும் கொஞ்ச நாளைக் குத் தானாக்கும்!.. இதை ஒன் சுங்கடி முந்தானை யிலே முடிபோட்டு வச்சுக் கிடு!... ஆமா, செப் பிப் பூட்டேன்! உன்னோட ஆசையான, நேசமான-மச்சான் உசிரைப் பலி வாங்காமல், நான் நல்ல தூக்கம் துரங்கவே மாட்டேன்! இது சத்திய மான சத்தியமாக்கும்! நீ இல்லாமல், நான் இந்த மண்ணிலே முழுப்பைத் தியமாகிட்ட அநியாயத்துக்குப் பழிக்குப் பழி வாங்காமல் தப்புவேனா நான் ? நான் எப்பவுமே சூரப் புலியே தான்!”

புண்ணியத் தாலி ஊசலாடியது.

உதயசூரியனைக் கண் காணாமல் செய்த பெரு மையில், வெய்யில் சூடேறிக் கொண்டிருக்கிறது.

‘ஐயையோ... எந்தெய்வமே...!”

அலறிக் கதறிக் கொண்டே, தலைவிரிகோலமாக ஒடோடி வந்தாள் பூங்கா வனம்! நெற்றிக்கு மகிமை சேர்த்த மீனாட்சி குங்குமம் சன்னம் சன்னமாகக் கரைகிறது; கரைந்து கொண்டிருக்கிறது, கொண்டைப் பூக்கள் கெண்டை மீன்களாகத் துவண்டு வீழ்கின்றன; ரத்தமும் ரணமுமாகிக் குற்றுயிரும் குலை உயிருமாகப் பேச்சு மூச்சில்லாமல் வெறும் பிணம் கணக்கிலே. கண்மூடிக் கிடந்த சிங்காரவேல னின் பாதங்களிலே நெடுஞ்சாண்கிடையாகச சரண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/125&oldid=1459990" இலிருந்து மீள்விக்கப்பட்டது