பக்கம்:அமுதவல்லி.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம்

துரைராஜனைக் கைவிட்டு விடத் தீர்மானித்து விட்டாயா, பார் வதி?...’

“ஆமாம்; நூற்றுக்கு நூறு உண்மை. போட்டியாம்- போட்டி! நாட்டிய உலகம் என்னை வானளாவப்புகழ்கிறது; இந்தத் துரைராஜன் என்னை வாய் கொண்ட மட்டும் தூற்றுகிறான். பார்க்கிறேன்!. இன்றைய நடனப் போட்டியிலே எனக்கே தான் வெற்றி!’

“அப்படி யென்றால், உன் மலர் மாலை .?’

‘சோமநாதனின் அழகுக் கழுத்துக்கேதான்!”

‘சபாஷ், நீல கண்டா! உன் புத் திசாலித் தனத்துக்கு யாம் பெரிதும் மெச்சினோம். இந்தா, பிடி உத்தரீயத்தை!’

‘நான் தப்பித்தேன், துரை. அந்தி நெருங்குகிறதல்லவா? தில்லையிலே கல்லுருவாகச் சமைந்து நிற்கச் சபித்த அந்த ஒரிஜினல் பிரானாகவே நீ வடி வெடுத்து, ஒரு சாபம் இட்டது போதாதென்று. எங்கே என்னை யும் வேறு சபித்துவிடப்போகி றாயோ என்று உயிர் நடுங்கிப் போனேன். நல்ல வேளை, நான் தப்பித்தேன், பிழைத்தேன்!”

‘அஞ்சேல்...’

‘அபயம்!”

“பேஷ், பேஷ்!”

“சோமநாதன் வாயில் மண்போட வேண்டும்!”

அதை நான் ஏன் சொல்ல வேண்டும்? என் வாயில் நீ சர்க் கரையைப் போட்டு விடுவாயல் லவா...?’’
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/133&oldid=1376556" இலிருந்து மீள்விக்கப்பட்டது