பக்கம்:அமுதவல்லி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம்

“வார்த்தைகள் அளவுக்கு மிஞ்சிக் கனம் பெறுகின்றன. அப்படியென்றால், நடன நாடகம் என்ன ஆவதாம்? அதன் உயிர்க் கருத்து என்ன ஆவதாம்?’’

  • அது தூசுக்குச் சமானம். சிவனுக்கு அந்தச் சக்தி தோன்றிருக்கலாம். இந்தப் பார் வதி நடனத்தில் எவனுக்கும் சளைக்கமாட்டாள்; தோற்கமாட் டாள்; என் சபதம், சூளுரை, வெற்றி பெற்றுவிட்டது. நான் நடன ராணி பார்வதி!...”

இந்தப் பதிதையின் நிழல் பட்டாலே நமக்குப் பாவம்... வாருங்கள் அப்பா! ...’

ஒடுங்கள்!.. இல்லையென்றால், உங்களைச் சபித்துவிடுவேன். உள்ளத்தைப் புரிந்து கொள்ளத் திராணியில்லாத-நடனத்தின் ரகசியத்தை அறிந்து கொள்ள மூளை இல்லாத நீங்கள் எங்கள் தமிழ் நாட்டுக்குத் தேவையேயில்லை. ஆனால் ஒன்றை மட்டும் மறந்து விடாதீர்கள்; இந்தப் பார்வதி பண்பை உயிராகக் காக்கும் தமிழ்ப் பெண்.’

‘பார்வதி, நடனத்திலே நான் தோற்றேன் என்றே வைத் துக்கொள்; நான் வருந்த மாட்டேன்... ஆனால், நான் போட்டியிலே வெற்றி பெற்றுவிட் டேன். தோற்றவன் வெற்றி பெற்ற கதை தான் இங்கேயும் நடக்கிறது. எப்படியோ, என் நாடகம் பலித்துவிட்டது. ஆமாம்; காதல் போட்டியிலுங்கூட நான் தான் உனக்குச் சமம்?. இந்தத் துரைராஜன் அந்தச் சோமநாதன் அல்லவே?...’

‘அன்பரே, என்னை எல்லைச் சக்தியாக ஆக்கத் தீர்மானித்துவிட்டீர்கள் போலும்!,. நான் தமிழ்ப் பெண் பார்வதி!. நீங்கள் எனக்கு நிழல் தர விரும்பினால், அது என் பூஜா பலன் தான்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/137&oldid=1376568" இலிருந்து மீள்விக்கப்பட்டது