பக்கம்:அமுதவல்லி.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம்

‘அப்படியெல்லாம் சொல்லாதே. தர்மராசா நம்பளுக்கு ஒறவா என்ன, நம்ப மனசுப்படி நடக் கறதுக்கும்! . இதைக் குடிச்சிடு; அப்பாலே சுடுகஞ்சி கொண்டா ரேன்.’ .

அன்பு எதையும் கேட்பதில்லை என்பார்கள் ஆனால் அவனோ தண்ணீரைக் கொடுத்துக்கொண் டிருந்தாள். சற்று முன்னம் உணர்வு தப்பிய கோலத்தில் நடந்த போராட்டத்தையும் குழப்பத்தையும் எண்ணிப்பார்க்க முயற்சி செய்தது அவள் வரை விரயமே!

பிடிவாதத்துக்கு மருந்து கொடுக் கப்பட்டது,

“முன்னே போலே இப்ப என்னாலே ஓடித்திரிஞ்சு வேலை செய்ய ஏலல்லேயே, தம்பி! ... அன்னன்னையப் பொளுதைக் கடத்தோனுமே, என்னா செய்யிறது?’’

சுள்ளி கொண்டு வருவாள் ; புல் கட்டு சுமப்பாள்: இலைதழை சேகரம் செய்வாள்; அரிசி புடைப்பாள்; பாத்திரம் பண்டம் கழுவுவாள்; எடுபிடி அலுவல் அவளுக்கு அத்துபடி, செல்லாயியின் வாழ்க்கை அனு பவங்கள் இவை. சாண் வாயிற்றுக்குப் பதில்’ சொன்ன உழைப்பின் சுருக்கம் இது.

‘அக்கா! உன்னோட சொந்தக் காரரு கந்தசாமிகிட்டே நீ குடுத்து வச்சிருக்கிற பணத்தை வாங்கு; முதலிலே வைத்தியர்கிட்டே கை காட்டி மருந்து சாப்பிடு; அப்பறம் வயத்துக்கும் வஞ்சனை செய் யாமச் சாப்பிடு!” -

‘ஆபத்து சம்பத்துக்கு ஒத்தாசையா இருக்கணுமின்னு இருபத்தேளுருவாய் என்னோட பணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/143&oldid=1376581" இலிருந்து மீள்விக்கப்பட்டது