5
‘கடல்முத்து’ வைத் தொடர்ந்தும், தொடர் சேர்த்தும் இப்பொழுது, முத்து முத்தான சிறு கதைகள் அடங்கிய ‘அமுதவல்லி’ என்கிற என்னுடைய அடுத்த சிறுகதைத் தொகுப்பு நூல் துரை. இராமு பதிப்பக வெளியீடாக வருகிறது. இது, என் சிறுகதை நூல் வரிசையில் இருபத்தி ஐந்தாவது ஆகும்!
தமிழ்ப் படைப்பு இலக்கியத்தில் சிறுகதையின் வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் அருந்தொண்டு— பெருந்தொண்டு ஆற்றின ‘உமா’வை இலக்கிய ஆர்வலர்கள் மறக்க மாட்டார்கள்; ‘உமா’ வை எண்ணுபவர்கள் இந்தப் பூவையையும் எண்ணியதும், எண்ணுவதும் சகஜம்!
‘சுதேசமித் திரன்’, ‘தினமணி கதிர்’, ‘ஆனந்த விகடன்’, ‘அலிபாபா’, ‘கல்கி’, ‘உமா’, ‘கலைமகள்’, ‘அமுதசுரபி’, ‘புதுமை’, ‘பொன்னி’, ‘காவேரி’, ‘நவயுவன்’ போன்ற ஏடுகளில் வெளியான நல்ல கதைகள் சில தேர்ந்தெடுக்கப்பட்டு, இப்போது திரும்பவும் வெளிப்படுத்தப்படுகின்றன.
தமிழ் இலக்கிய வரலாறு பற்றி ஆய்ந்தெழுதிய நல்லறிஞர்கள் சிறுகதைகள் குறித்துப் பேசும் போது, பூவையை மறந்து விடாமல் குறிப்பிட்டிருக்கின்றனர்.
1966 ஆம் ஆண்டில் என்னுடைய பூவையின் கதைகள் தமிழ்நாட்டு அரசாங்கத்தின் முதற் பரிசினை வென்றது. பின்னர், 1982-ம் ஆண்டிலே, தமிழக முதல்வர் டாக்டர் எம். ஜி. ஆர். அவர்கள் தமிழக அரசின் சார்பிலே எனக்கு இரண்டு இலக்கிய