பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

107

அச்சம் இப்போது இல்லை; பெருமை உணர்ச்சியே உண்டாயிற்று.

அரசர் குழந்தையைத் தம் அருகில் அமரச் செய்து அந்தப் பாட்டைச் சொல்லச் சொன்னர். அவன் கணீரென்று தான் எழுதிய பாடலைச் சொன்னான். அதைக் கேட்ட மருத பாண்டியருக்கு உவகை பொறுக்க வில்லை. தந்தையாருக்கோ ஆனந்தக் கண்ணீர் துளித்தது.

"புலவரே!” என்று அழைத்தார் மருத பாண்டியர். சர்க்கரைப் புலவர் பாண்டியரைப் பார்த்தார்.

"இந்தக் குழந்தை இனி இந்த அரண்மனைக் குழந்தை. என் அருகிலேயே இவன் இருக்கட்டும்" என்றார் மன்னர்.

புலவர் மனம் ஒரு பக்கம் உவகையும் ஒரு பக்கம் வருத்தமும் அடைந்தது.

"இங்கேயே இருப்பதென்றால் தாய் தந்தையரைப் பாராமல் இருந்து விடுவதன்று; வேண்டும் போதெல்லாம் உங்கள் ஊர் வந்து பார்த்துவிட்டு வருவான். ஆனல் அங்கே தங்கமாட்டான்.”

புலவருக்கு வார்த்தை எதுவும் வரவில்லை

நீங்கள் எப்போது இவனைப் பார்க்கவேண்டும் என்று விரும்புகிறீர்களோ அப்போது இவனைச் சிவிகையில் அனுப்புகிறேன். நீங்களும் உங்கள் மனைவியும் அடிக்கடி அரண்மனைக்கு வந்து சில நாட்கள் தங்கி விட்டும் செல்லலாம்."

"மன்னருடைய பேரன்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்! இவனுக்குக் கிடைத்த பாக்கியத்தை மிகப் பெரியதாக நான் கருதுகிறேன். ஆனால்-"