பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33

இந்த நாட்டில் இத்தகைய அதர்மச் செயல் நடப்பது நல்லதற்கு அல்ல. இதைப் பார்ப்பதைவிட நம் கண்களைப் பிடுங்கிக் கொண்டு விடலாம்.

(ஆரவாரம். கோவூர் கிழார் என்ற சத்தம்)

கூட்டத்தில் ஒருவர்: -புலவர் பிரான் கோவூர் கிழார் வரு கிருராம். அரசனுக்கு அறிவுரை கூற வருகிறார் போலும்! கடவுளே இவரை அனுப்பியிருக்கிறார்.

கோவூர் கிழார்:-(விரைவாக நடந்துகொண்டே) அரசன் எங்கே? குழந்தைகள் எங்கே? இன்னும் தண்டனையை நிறைவேற்ற வில்லையே?

உடன் வகுபவர்:-இல்லை இல்லை; நிறைவேற்றக் காத்து நிற்கிறார்கள். அரசன் அதோ அரண்மனையின் மேல்மாடத்திலிருந்து பார்த்துக்கொண்டு நிற்கிறான். கூட்டம் அதிகமாக இருக்கிறது. மக்களுடைய உள்ளக் கொதிப்பு மிகுதியாகி வருகிறது.

கோவூர் கிழார்:-அரசனிடம் நான் வருவதாகச் சொல்லி அனுப்புங்கள்; கூட்டத்தைச் சற்றே விலக்குங்கள்.

உடன் வருபவர்:-சற்று விலகுங்கள்; வழி விடுங்கள்.

(அரசன் கோவூர் கிழாரை வரவேற்க - எதிர்கொண்டு வருகிறான்.)

கோவூர் கிழார்:-கிள்ளிவளவன் புகழ் மங்காமல் ஓங்குக!

அரசன்:-என்ன, அப்படித் தங்களுக்கு மூச்சு வாங்குகிறதே உடல்நிலை சரியாக இல்லையோ?

கோவூர் கிழார்:-வேகமாக வந்தேன். நல்ல வேளை. சரியான சமயத்தில் வந்து சேர்ந்தேன். என் உடல் நிலை சரியாகவே இருக்கிறது. உள்ள நிலைதான் சரியாக இல்லை. தயை செய்து அரசர்பிரான் என் சிறு விண்ணப்பத்தைக் கேட்டருள வேண்டும். இப்-