பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58



"ஆட்டை நீ கொன்றிருக்கலாமே?” என்ற கேள்வி நவாபிடமிருந்து பிறந்தது.

“என்னுடைய நோக்கம் என் வலிமையைச் சமூகத்துக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதுதான். அந்த வாயில்லாப் பிராணியைக் கொன்று என்ன பயன்? அதை நாம் அடக்கினால் அடங்கிவிடுகிறது; அடக்கா விட்டால் துள்ளுகிறது."

நவாபு சிறிது யோசனையில் ஆழ்ந்தார். அருகில் இருப்பவர்கள், அவர் என்ன தண்டனை விதிக்கப் போகிறாரோ என்று கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

நவாபு பேசலானார்: "நீ சிறந்த வீரன்; உன்னை. நான் மெச்சுகிறேன்.”

தொண்டைமான் நிமிர்ந்து நோக்கினான்.

"நீ பெரிய வீரன் மட்டும் அல்லன்; பேச்சிலும் வல்லவன். உன் உடற் பலத்தையும் அறிவுப் பலத்தையும் பாராட்டுகிறேன். நமக்குத் தேவையானபோது உனக்கு ஆள் விடுகிறேன். நீ இனி நம்முடைய சேவகன். உன் பெயர் இனி வெறும் தொண்டைமான் அல்ல. "வளர் கடாவைக் காதறுத்த பகதூர் தொண்டைமான் நீ" என்று நவாபு சொன்னபோது யாவரும் அவனையே பார்த்தார்கள். -

அவன் நன்றியறிவோடு சலாம் வைத்தான். அன்றுமுதல் அவன் பின்னும் செருக்கோடு தன் வலிமையைப் பாதுகாத்து வந்தாள். வளர்கடாவைக் காதறுத்த பகதூர் தொண்டைமான் என்ற பெயர் எங்கும் வழங்கலாயிற்று.