பக்கம்:அமைதி, பாரதிதாசன்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன பண்ணையாரும், அவர் மனைவியாரும் நேற்றிரவு சின்ன பண்ணையிடம் வந்த அழகு மங்கையும் [பெரிய பண்ணையார் மனைவி] ஒரே வண்டியில் ஏறிக்கொண்டு நகர் நோக்கிப் பயணப்படுகிறார்கள். மூவரும் ஏறிய வண்டியானது பெரிய பண்ணையார் வீட்டுத்தெருவில் போகிறது. பெரிய பண்ணையார் அவர்களைப் பார்த்து வயிற்றைப் பிசைகிறார். அவர் கண்கள் தீயைக் கக்குகின்றன. மண்ணாங்கட்டி மகிழ்ச்சியுடன் மறுபுறம் செல்லுகிறான்.

எரிந்துபோன பகுதிபோக எரியாதன அனைத்திலும் உள்ள பல பொருள்கள் ஏழை மக்கட்குக் கிடைக்கின்றன. அவர்கட்கு நிறையச் சோறு சமைக்கப்படுகிறது. காய்கறிகள் ஆக்கப்படுகின்றன. மண்ணாங்கட்டி அங்கு ஒருபுற மிருந்த நெய்க் குடத்தை, அடுப்பில் இருந்த இருப்புச்சட்டியில் தலைகீழ் ஊற்றி அதில் உளுத்த வடை தட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறான்.

26