பக்கம்:அமைதி, பாரதிதாசன்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முதற் பதிப்பு 1946
இரண்டாம் பதிப்பு 1951
மூன்காம் பதிப்பு 1958

முழு உரிமை செந்தமிழ் நிலையத்தாருக்கே

அமைதி என்னும் இச்சிறு நாடகம், நாடக உறுப்பினர் - நடிகர் எவருக்கும் பேச்சில்லாது, நிகழ்ச்சிகளைக் கண்ணால் காணுவதால் மட்டும் கருத்தறியுமாறு அமைக்கப் பெற்றுள்ளது. ஆதலின் இதை ஊமை நாடகம் என்றேன். நடிகர் அனைவரும் ஊமைபோல் நடித்தலாலும், ஊமைகளைக் கொண்டும் இந்நாடகத்தை நடைபெறுவிக்கலாம் ஆதலினாலும் ஊமை நாடகம் என்றது பொருந்துவதாகும்.

இந்நாடகம் எம்மொழியாராலும் நடத்துவிக்க முடியும். கருத்துக்களும் உலகப்பொதுவானவை!

பாரதிதாசன்.

அமைதி எவ்வளவு அழகான சொல்! அது மட்டுமல்ல; ' அமைதி ' நடிக்க-படிக்க-ரஸிக்க உளம் களிக்கவும், மிக அழகு தருகிறது. இது ஒரு புது முயற்சி! இதுபோன்ற நூல் தமிழ் நாட்டில் வெளி வந்ததில்லை. கவிஞரின் புதிய முயற்சிக்கும் உழைப்புக்கும் தமிழ்நாடு கடமைப்பட்டிருக்கிறது.

செந்தமிழ் நிலையத்தார்.

விலை: ஐம்பது காசு