பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

அம்பிகாபதி காதல் காப்பியம்

பகவன் முதற்றே உலகு”
என்றவள் கூற, இறுதியும் கூறென,
இறுதியை நீரே இயம்புக என்ன,
“ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்

180 கூடி முயங்கப் பெறின்”
என்பது இறுதிக் குறளாம்; இதன்பொருள்
அன்புடன் கூறென அம்பி வினவ,
அன்புடை நீரே அறிவிப் பீரென,
இன்புடன் பொருளை இனிது கூறுவான்;

185 “ஊடுவது காமத்திற்குப் பேரின்பம்; பின் தழுவிப்
புணரப்பெற்றால், அஃது, அப் பேரின்பத்திற்கு மிகவும்
பேரின்ப மாகும்.”

என்பது இதன்பொருள் என்று மொழிந்து,
ஊடல் தீர்ந்ததோ? உப்பால்[187] இருவேமும்
கூடல் தகுமோ என்றவன் கூற,
வாடல் கொண்டவனிதை உடனே

190 மூடி வாயை முறுவல் பூத்தாள்.[190]
அம்பி அதன்பின் அவள்மடி படுத்தான்;
அம்பியின் தலையை அவள் தன் கையால்
அணைத்துக் கொண்டாள்; அதன்பின் என்ன!
இணைத்த நிலையில் இருபெருங் காதல்

195 அன்றில் புள்ளென[195] அகவுணர் வுந்த
ஒன்றி முயங்கினர் உலகை மறந்தனர்;
மதுவுண் ஞிமிறென[197] மயங்கித் திளைத்தே
இதுவரை யறியா இன்பச் சுவையினை
முதன்முதல் கண்டனர் முதலிர வினிலே.

200 சுவைகண்ட பூனை சோம்பி இருக்குமா?


187உப்பால்-இனிமேல்.^  190முறுவல் பூத்தாள்-புன் முறுவல் செய்தாள்.^  195அன்றில் புள்-அன்றில் பறவை.^  197மது-தேன்; ஞிமிறு-வண்டு.^