இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கம்பர் மகனைக் கடிந்த காதை
43
(கம்பர் மகனைக் கடிதல்)
அகமது மாழ்கி அதிர்ச்சி யுற்றார்;
‘ஒன்றே குல’மெனும் உயர்ந்தோர் கொள்கையை
100 நன்றே வேந்தன் நயக்க வேண்டுமே!
‘விரலுக் கேற்ற வீக்கம்’ என்ப,
‘வரவுக் கேற்ற வாழ்’வென மொழிப;
அவரவர் தகுதிக் கமைந்ததே வாழ்க்கை
முடவன் கொம்புத் தேன் பெற முயன்ற
105 மடமை போன்றதே மைந்தநின் செயலெனக்
கம்பர் மகனைக் கடிந்துரைத் தாரரோ.
98. மாழ்குதல் - மயங்குதல். 100. நயத்தல் - நயமாய் விரும்புதல். 101. என்ப - என்று சொல்லுவர். 103. மொழிப - மொழிவார்கள்.