இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
திருவேங்கடவன் பல்கலைக்கழகத் துணைவேந்தர்
அன்புப் படையல்
நள்ளிரு னிடையே முளைத்தசெஞ் சுடர்போல்
நலமுறத் தோன்றிய சீலன்;
ஒள்ளிய அறிவின் நற்பய னாய
ஒழுக்கமும் திறமையும் பெற்றேன்;
தெள்ளிய வுளத்தன்; பல்கலைக் கழகச்
செவ்விய இதயமே போல்வான்;
விள்ளரும் புகழாள்; சீர்சகத் நாத
வேந்தனுக் குரியதிந் நூலே.