பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81 (மேளதாளங்களின் ஒலி கேட்கின்றது. டெல் எழுந்து கிற்கின்றன். ஒரு கல்யாண ஊர் வலம் வருகின்றது. கூட வந்துகொண்டிருந்த ஸ்டஸ்ஸி என்பவன் மட்டும் விலகி டெல்லின் பக்கம் போகின்ருன். ஊர்வலம் தொடர்ந்து செல்கின்றது.) tடஸ்ஸி: நல்ல பணக்காரக் குடியானவன். கல்யாணப் பெண்ணை அழைத்துப் போகிருன். அதோ பக்கத்து ஊரில் இன்று வந்தவர்களுக்கெல்லாம் சாப்பாடு. அழைப்பே வேண்டாம். யாரும் வரலாம். நீங்களும் வாருங்களேன்! |டல் : உற்சாகமான இடம் துக்கப்படுகிறவனுக்குப் பொருந் தாது. தயவு செய்து நீங்கள் போங்கள் ! i (ஆரம்கதை பல குழந்தைகளே அழைத்துக் கொண்டு வந்து பாதையை மறித்து கின்று கொள்கிருள்.) tடஸ்ஸி : யாரம்மா நீ? இப்படி வழிமறித்து நிற்கிருயே! ஆரம்கதை : இங்கே அவர் என்னைத் தாண்டிச் செல்ல முடியாது! அவரைக் கண்டு நான் நேரில் மன்ருட வேண்டும்! ஸ்டஸ்ஸி எவரை ? ஆரம்கதை : கவர்னரை! ஸ்டஸ்ஸி: (டெல்லிடம்) நீங்கள் யாரையோ எதிர்பார்த்துக் காத்திருப்பது போலிருக்கிறது. நான் போகிறேன், வந்தனம் ! (போகிருன்.) (பிரிஷார்ட் அவசரமாக ஓடிவருகிருன்.) விஷார்ட் : வழியைவிட்டு ஒதுங்குங்கள்! மேன்மை தங்கிய கவர்னர்துரை வருகிருர்! (டெல் வேகமாக வெளியேறுகிருன். ஜெஸ்ல ரும் ருடோல்பும் குதிரைகள்மீது அமர்ந்து வருகின்றனர்.) ஜேஸ்லர்: நீ என்ன சொன்னுலும் சரி, நான் சக்கரவர்த்தி யின் ஊழியன், அவர் மனப்படி நடப்பதே என் முதல் கடமை. என்னை இங்கே எதற்காக அனுப்பி வைத்தார்? அ-6