பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 அம்மையும் அப்பனும் உருவாகிப் புறப்பட்டு இங்கு ஒருத்திதன்னால் வளர்க்கப் பட்டு' என்கின்றார் அவர். ஆம் முதல் கரு குழம்பாக (Liquid) இருக்கிறது; பின் கட்டியாகிறது (Solid). பின் மூளை உண்டாகிறது; பின் தோற்ற அசைவுகளுக்கு முதற் காரணமாகிய கரு நரம்பு (Originating nerves) உண்டா கிறது. பின் வெண்ணிற எலும்பு உண்டாகிறது. பின் முழு உருவம் பெற்று, உலகில் பிறந்து, இந்த உலகத் தாயால் வளர்க்கப் பெறுகிறது என்கிறார். இது இங்கே தேவையில்லையாயினும் முன்னரே கூறியுள்ள பேர்தி லும் தமிழர்தம் அறிவியல் ஆய்வின் தொன்மை காட்டவே இங்கும் குறித்தேன். இப்படி அண்டம் தொடங்கி அதில் தோன்றும் மனிதப் பிண்டம் வரையில் அறிவியல் வழி உணர்த்தும் அனைத்தும் ஆண்டவன் செயலே எனக் கண்டனர் முன்னோர். இந்த மணிவாசகர் காட்டிய உவமையினையும் பாரதியார் விளக்கிய பன்மைக் கூட்டத்தினையும் நினைக் கும் போது என் முன் இன்றைய விஞ்ஞான விளைவு ஒன்று எதிர் நிற்கின்றது. அறிந்தோ அன்றி அறியாமலோ தொலைக்காட்சிப் பெட்டியில், இந்த அண்ட கோளத் தினை-இல்நுழை கதிரின் துன் அனுப்புரையும் நிலை யினைக் காட்டுகின்றன. தமிழில் செய்தியைத் தொடங்கு முன் வெற்றிடம் காட்டி, பின் ஒளியிடையில் பலப்பலஎண்ணற்ற சிறு துகள்கள் உழன்று கொண்டே-ஒடிக் கொண்டே இருக்க அவற்றின் நடுவே நம்பூமி உருண்டு உருண்டு வருவதையும் அதைச் சுற்றிச் சில வளையங்கள் தொடரப் பின் செய்திகள் வரும் குறிப்பினையும் காட்டு கின்றனர். இதைப் பார்க்கும் போதெல்லாம் பரந்த அண்டகோளமும் அதில் சுற்றிச் சுற்றிப் பெயர்ந்தோடும் உலகங்களும் அவற்றிற்கிடையிலுள்ள பூமியும் ஒன்றாகச் சுழல்வதையும் நான் நினைத்துக் கொள்வேன். பிற