பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. 18–8–93 3. இருவரையும் பெற்ற ஆன்மா! பெரியோர்களே! வணக்கம். கடந்த இரு புதன் கிழமைகளிலும் இறை வனாகிய அப்பனும் சக்தியாகிய அம்மையும் நம்மை - உயிர்களை-அனைத்தையும் எவ்வெவ்வாறு அடித்துத் திருத்தி அருளாட்சியில் அமர்த்தி வாழவைத்தனர் என் பதைக் கண்டோம். இன்று அந்த அருளாட்சிக்கு உட் பட்ட அந்த அம்மையையும் அத்தனையும் பெற்ற ஆன் மாவின் தன்மையை ஒரளவு காண இருக்கின்றோம். உங்கள் அனைவர்தம் வாழ்த்தின் வலத்தால் யாவும் இனி மையாக அமையும் எனும் துணிவுடையேன். தங்கள் நல்வாழ்த்துடன் தொடங்குகின்றேன். "இருவரையும் பெற்ற ஆன்மா' என்ற தொடருக்கு இரு வகையாகப் பொருள் கொள்ளலாம். இருவரையும்அன்னையையும் அத்தனையும்-தாயாகப் பெற்ற ஆன்மா என்றும் இருவரையும் தான் பெற்றெடுத்த ஆன்மா என்றும்.பொருள் கொள்ள இடமிருக்கின்றது. முன்னது அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதென்றாலும் பின்னதை ஏற்றுக் கொள்ளச் சிலர் தயங்குவர். ஆயினும் இறைவன் பிள்ளையாக வந்து குழவியாகி விளையாடிய காட்சியினை முன்பு கண்டோம். "எழுதரிய மறைச்சிலம்பு கிடந்து புறத்தலம்ப அன்பர் இதயம் என்னும் செழுமல ரோடையின் மலர்ந்த சிவானந்தத் தேன் ததும்பும் தெய்வக் கஞ்சத்