பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

...

இருவரையும் பெற்ற ஆன்மா 89 தமிழின் வருகைப் பருவப் பாடலைப் பாடும் போது ..அம்மையே முன் வந்து. அருள் செய்தாள் எனக் காண் கிறோம்.. - 'மலையத்துவசன் பெற்ற பெருவாழ்வே வருக வருகவே'.. என்று குமரகுருபரர் பாடிய போது மீனாட்சி கோயிலில் நேரில் இளங்குழந்தையாக-பெண்ணாக வந்து காட்சி யளித்த வரலாறு நாடறிந்த ஒன்றல்லவா; எனவே இருவர் பெற்றெடுத்த ஆன்மா என்பதும் ஆன்மா பெற்றெடுத்த இருவர் என்பதும்-இரண்டும் பொருந்துவனவேயாம்...

இனி இந்த அளவொடு இதை நிறுத்தி அந்த ஆன்மா வினைக். காண்போம்...

நான் முன்னரே சுட்டியபடி இறைவன், ஆன்மா, அடுத்துக் காணப்போகும் அண்டம் இம்மூன்றும் என்றும் உள்ளனவேயாம்.. சைவசித்தாந்திகளும் பிற சமயத்தவர் களும் இதையே முப்பொருள் உண்மை என்பர். பதி, பசு, பாசம் என்ற முப்பொருள்களே இவை. இம்மூன்றும் என்றும் உள்ளனவேயாயினும் முதலாவதாகிய இறை வனுக்கும் பிற இரண்டினுக்கும் வேறுபாடு உண்டு. ஒன்றான இறைவன், என்றும் யாண்டும் நிறைந்துயாதொரு வேறுபாடும் இன்றி - அணுவுக்கணுவாய் அப்பாலுக்கப்பாய்ப் பரவி - .எல்லா உயிர்களையும் .அண்டங்களையும் தன்னுள் அடக்கி, தானும் அவற்றுள் அடங்கி நின்று அவற்றை.. வாழ்வித்து வழிகாட்டும் தன்மை உடையவன். ஆனால் ஆன்மா, அண்டம் இரண் டும் அரைநிமிட நேரமும் கூட ஒரே நிலையில் இருப்பன அல்ல. அவை அழியாவிடினும் மாறும் தன்மை உடையன. பெருகவும் சிறுகவும் குறுகவும் அகலவும் காலந்தோறும் மாறவும் நிலை கெட்டு நிற்பனவாம். இவற்றை இயக்கு அ-6....