பக்கம்:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்


“சனிக்கிழமை இரவு படம் பார்க்க உங்களுக்கு விருப்பமா? டிக்கட் தருகிறேன்” என்றார்.

சரி என்ற கூறி, அவர்கள் அனைவரும் போய்ப் படம் பார்த்தார்கள். -

வாரக் கடைசியில் அவர்களுடைய சம்பளப் பட்டியலை நடிகர் பார்த்தபோது அவர் திடுக்கிடும் படியான ஒர் இனம் குறிப்பிடப்பட்டிருப்பதை அவர் கண்டார். அது என்ன?

ஒவ்வொரு தொழிலாளியின் பெயருக்கும் எதிரே 'சனிக்கிழமை பிரின்ஸெஸ் திரைஅரங்கில் நான்கு மணிநேரம் -எட்டுஷில்லிங் கூலி' என்று போட்டிருந்தது.

படம் பார்த்தது கூட தாங்கள் பார்த்த வேலை என்று தொழிலாளர்கள் கருதினார்கள் போலும்!



(7) ழுதிக்கொண்டே ருந்தவர்



தன்னுடைய 13-வது வயதில் இறகு பேனாவினால் எழுதி,

எழுத்தர் அலுவல் பார்த்த பிரெஞ்சுக்காரருக்கு, நாவல் எழுதும் ஆர்வம் உண்டானது ஆச்சரியம் அல்லவா? -

'அந்த வயதில், சிந்தித்துச் சுயமாக எழுதினால், மற்றவர் மதிப்பார்களா? என்று எண்ணவில்லை. ஊக்கம் பிறந்தது; எண்ணம் வளர்ந்தது; எழுத்துப் பிறந்தது!

அவர் யார்? அவரே அலெக்ஸாண்டர் டூமாஸ்!