பக்கம்:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்

15


அதனால் நான் வீடு சேர்ந்ததும் அந்த டிரைவருக்ககு எவ்வளவு கட்டணம் கொடுப்பது என்று திகைத்து விட்டேன். சாதாரண டாக்ஸி டிரைவர்களுக்குக் கொடுக்கும் வழக்கமான கட்டணமான ஆறு பென்சுக்கு அதிகமாகவே இவருக்குக் கொடுத்தாக வேண்டும் என்று எண்ணி, ஐந்து ஷில்லிங் அளித்தேன். அவர் அதை வாங்கிக் கொள்ள மறுத்து விட்டது எனக்குப் பெரிதும் வியப்பாகத்தான் இருந்தது.

மறுநாள் அந்த மனிதர் என்னைப் பார்க்க வந்தார். அவர் பெயர் அச்சிட்ட சீட்டைக் கண்டதும் எனது வியப்பு அதிகமாயிற்று. பல லட்சங்களுக்கு அதிபதியான ராஜா அவர் என்பது தெரிந்தது” என்று குறிப்பிடுகிறார் பெர்னாட் ஷா.


(14) பொறுப்பற்றவர்களின் போக்கு


தீனபந்து ஆண்டட்ரூஸின் தந்தை, ஒரு சமயம் ரயில் நிலையத்தில் வாழைப் பழத் தோலால் சறுக்கி விழுந்தார். அதன் விளைவாகப் படுத்த படுக்கையாகி, பின்னர் மரணம் அடைந்து விட்டார். .

அது முதல், அவர் வாழைப் பழத்தோலை எங்கே கண்டாலும் அதை எடுத்து அப்பால் எறிந்துவிட்டுச் செல்வதே அவருடைய வழக்கம்

வாழைப் பழத்தைத் தின்று விட்டு, தோலை தெருவின் மத்தியில் எறியும் பொறுப்பற்றவர்களை இன்றும், எங்கேயும் காணலாம்.